News March 13, 2025
செவ்வாய் பெயர்ச்சி: ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்

செவ்வாய் பகவான் கடந்த பிப்.24-ம் தேதி மிதுன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்தார். இதனால் பின்வரும் 3 ராசிகள் நற்பலன்கள் பெறுவார்கள்: *மேஷம்: குடும்பத்தில் குழப்பங்கள் தீரும், பணியில் முன்னேற்றம், மனப் பிரச்னைகள் தீரும் *கடகம்: சிக்கல்கள் குறையும், திருமண யோகம், புதிய வீடு, வாகன வாய்ப்பு, தன்னம்பிக்கை, தைரியம் கூடும் *சிம்மம்: நிதி ரீதியான முன்னேற்றத்தால் கடன்சுமை குறையும், வெளிநாட்டு பயண வாய்ப்பு.
Similar News
News March 14, 2025
பழைய ஓய்வூதியத் திட்டம் என்ன ஆனது?: இபிஎஸ் கேள்வி

திமுக அரசின் கடைசி முழு பட்ஜெட்டில் திட்டங்கள் வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளதாக, இபிஎஸ் குறை கூறியுள்ளார். அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், கல்விக்கடன் ரத்து, 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்வு, டீசல் விலை ₹4 குறைப்பு, ரேஷனில் 1 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆனது என்றும் அவர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 14, 2025
20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்: அமைச்சர் அறிவிப்பு

அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது கையடக்கக் கணினி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ₹2,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, லேப்டாப் (LAPTOP) அல்லது டேப் (TAB) பெற்று கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 14, 2025
சென்னையில் 4 வழித்தட உயர்மட்ட சாலை!

சென்னை ECR சாலையில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 14.2 கி.மீ தூரத்திற்கு ரூ.2,100 கோடி மதிப்பீட்டில் 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்படுகிறது. மேலும், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலைக்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.