News March 13, 2025
வேலூர் மாவட்டத்தில் மீண்டும் சதம் அடித்த வெயில்

வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று (மார்ச் 13) அதிகபட்சமாக 101.4°F டிகிரி பாரன்ஹீட் வெயில் அளவு பதிவானது. மேலும் பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாதத்தில் 2 வது முறையாக வெயில் சதமடித்துள்ளது.
Similar News
News March 4, 2026
வேலூரில் வீடே அதிர கேட்ட சத்தம்!

பேரணாம்பட்டு பங்களாமேடு பகுதியில் வசித்து வருபவர் முன்னி. இவரது தாய் ஜமீலாவின் மறைவுக்காக வீட்டை பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு, பயங்கர சத்தத்துடன் பிரிட்ஜ் வெடித்துத் தீப்பிடித்தது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். மேலும், வீட்டில் இருந்த ரூ.20,000 பணம் மற்றும் பல பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 4, 2026
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 3, 2026
வேலூர் : நர்ஸ் வேலை வேண்டுமா? ரூ.34,800 சம்பளம்!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <


