News March 13, 2025
XXX சோப் நிறுவனர் காலமானார்

தென்னிந்தியாவில் பிரபலமான ‘XXX சோப்’ நிறுவனத்தின் தலைவரான மாணிக்கவேல் அருணாச்சலம் காலமானார். சமீபமாக நோய் வாய்ப்பட்டிருந்த அவர், ஆந்திராவில் உயிரிழந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இவர், ஆந்திராவில் குடியேறி சோப் தொழிலைத் தொடங்கினார். இத்தொழில் படிப்படியாக வளர்ந்து, தற்போது தென்னிந்தியாவின் நம்பர் 1 சோப் என்று சொல்லும் நிலையை எட்டியுள்ளது.
Similar News
News March 14, 2025
மாதம் ரூ.5,000 திட்டம்… 17ஆம் தேதி செயலி அறிமுகம்

பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ், தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் வேலைவாய்ப்பு பயிற்சி அளித்து மாதம் ரூ.5,000, ஒரு முறை ரூ.6,000 மத்திய அரசு கொடுக்கிறது. இதில் சேர வருகிற 31ஆம் தேதி கடைசி நாள். இதில் இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க கணினியை மட்டும் மக்கள் நம்பி இருந்தனர். இதை எளிதாக்கும் வகையில், 17ம் தேதி புதிய செயலியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்யவுள்ளார்.
News March 14, 2025
ரசிகர்களின் அன்பால் உருகிய ‘டிராகன்’ நாயகி…!

ரீல்ஸ், ஷார்ட்ஸ் என சோஷியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் நடிகை கயாடு லோஹர்தான் இருக்கிறார். டிராகன் பட வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், டிராகன் படம் எனது வாழ்க்கையை மாற்றி இருப்பதாக கயாடு உருக்கமாக பதிவிட்டுள்ளார். ‘என் மீது நீங்கள் பொழிந்த அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. இந்த அன்பு விலைமதிப்பற்றது’ என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
News March 14, 2025
டிரம்ப் வைத்த ஆப்பு.. மஸ்கிற்கு பேக்ஃபயர் ஆன சோகம்

டிரம்பின் அதிரடி வரிவிதிப்பு நடவடிக்கைகள், எலான் மஸ்கிற்கு எதிராகவே திரும்பியுள்ளன. டிரம்புக்கு போட்டியாக, USA இறக்குமதிகளுக்கு மற்ற நாடுகளும் அதிகம் வரி விதிக்க தொடங்கினால், அது டெஸ்லா நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் டெஸ்லா EV கார்களின் உற்பத்தி விலை அதிகரிப்பதோடு, சர்வதேச சந்தையில் போட்டியை எதிர்கொள்வது கடினமாகும் என அந்நிறுவனம், டிரம்ப் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளது.