News March 13, 2025
சேலத்தில் வெடிகுண்டு மிரட்டல் புரளி

சேலம் இரும்பாலை வளாகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி ஆகிய இரண்டு இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என சோதனைக்குப் பின்பு போலீசார் அறிவித்துள்ளனர். இதனால் சேலம் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Similar News
News March 4, 2026
கன்னங்குறிச்சி அருகே இளம்பெண் விபரீத முடிவு!

சேலம் சின்ன திருப்பதி சந்திரன் கார்டன் பகுதியைச் சேர்ந்த மணியின் மகள் தேவிகா (20). இவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கன்னங்குறிச்சி போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் சரியாக வேலை செய்யாததால் தந்தை மணி அவரைத் திட்டியதாகவும், இதனால் மனமுடைந்த தேவிகா விபரீத முடிவை எடுத்ததும் தெரியவந்தது. போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 4, 2026
வாழப்பாடி அருகே விபத்து; ஒருவர் பலி

அயோத்தியாப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ (31). இவர் சேலத்தில் தனியார் எலக்ட்ரிக் கடையில் லோடுமேனாக பணிபுரிகிறார். நேற்று காலை, வாழப்பாடி மகேஸ்வரி தியேட்டர் அருகே தம்மம்பட்டி சாலையோரம் நடந்து சென்றபோது, வாழப்பாடி நோக்கி தண்ணீர் டேங்க் இழுத்துச் சென்ற டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த இளங்கோ மருத்துவமனைடில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார் விசாரணை.
News March 4, 2026
சேலம்: இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று (03.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


