News March 13, 2025
வியாபாரம் பெருக அருள் புரியும் விஜயநாதேஸ்வரர்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிசயமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மங்களநாயகி சமேத திருவிஜயநாதேஸ்வரர் கோயில். தேவார பாடல் பெற்ற இக்கோயிலில் விஜயநாதரை வணங்கினால் ஜெயம் கிட்டும் என்பதால் வியாபார செயல்களில் வெற்றி அடைய ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்கின்றனர். தொழிலில் முன்னேற, வியாபாரம் சிறக்க வியாபார அபிவிருத்தி ஸ்தலமாக இக்கோயில் விளங்குகிறது. உங்களது நண்பர்களுக்கு பகிரவும்!
Similar News
News September 12, 2025
திருவாரூர்: பைக்கில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது

திருவாரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் அரசு மது பாட்டில்களை விற்பனைக்காக கடத்தி வந்த மாங்குடியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு, இவர் கடத்தி வந்த 22 லிட்டர் மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 12, 2025
வலங்கைமான் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் மேலவிடயல் ஊராட்சி கும்ப சமுத்திரம் கலைஞர் நகரில் கட்டப்பட்டு வரும் பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வ.மோகனசந்திரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர் உடனிருந்தனர்.
News September 12, 2025
திருவாரூர் இளைஞர்களே RBI வங்கியில் வேலை

திருவாரூர் மக்களே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! RBI இந்திய ரிசர்வ் வங்கி (Officers) பணிகளை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. வங்கி வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? உடனே Register பண்ணுங்க!
⏩துறை: இந்திய ரிசர்வ் வங்கி
⏩பணி: Officers
⏩மாத சம்பளம்: ரூ. 78,450/-
⏩மொத்தம் பணியிடங்கள்: 120
⏩வயது வரம்பு: 30-க்குள்
⏩கடைசி தேதி: 30.09.2025
⏩இணைய வழியில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!