News March 31, 2024
தூத்துக்குடி: 9 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை சூசை பாண்டியா புரத்தை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவரது 9 வயது மகள் சிவநிகிலா நேற்று குளியல் அறையில் கழுத்தில் டவலை கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று துண்டு கழுத்தில் இறுக்கி மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.
Similar News
News August 15, 2025
தூத்துக்குடியில் இரவு ரோந்து போலீசார் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. மேலும் அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
News August 14, 2025
தூத்துக்குடி மக்களே போட்டோ எடுக்க ரெடியா?

தூத்துக்குடியில் புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு புகைப்படக் கலைஞர்கள், பொதுமக்களுக்கான புகைப்படக் கண்காட்சிப் போட்டி நடைபெற உள்ளது.இதில் தூத்துக்குடியின் கலாச்சாரம், பாரம்பரியம், தெரு வாழ்க்கை, திருவிழாக்கள், நினைவுச் சின்னங்கள், மீனவர்களின் வாழ்க்கை, இயற்கை காட்சி புகைப்படங்களை போட்டிக்கு அனுப்பலாம். இதற்கான விதிமுறைகள், விண்ணப்பிக்கும் முறைகளை <
News August 14, 2025
தூத்துக்குடி: மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் வேலைவாய்ப்பு

மாவட்ட நலவாழ்வு சங்கம், மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் காலியாக உள்ள சுகாதார பணியாளர் (MLHP) தொகுப்பூதிய பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாத ஊதியம் ரூ.18,000. விண்ணப்பங்களை <