News March 13, 2025
ரூ.2,100 கட்டினால், ரூ.5 லட்சம் பெறலாம்… FACT CHECK

பிரதம மந்திரி முத்ரா யோஜனா கடன் திட்டம் பற்றி ஒரு தவறான தகவல் பரவி வருவதாக மத்திய அரசின் PIB Fact Check பிரிவு எச்சரித்துள்ளது. ரூ.2,100 முன்பணம் கட்டி இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால், ரூ.5 லட்சம் கடன் கொடுப்பதாக ஒரு போலி லோன் அப்ரூவல் கடிதம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரீ-பைனான்சிங் ஏஜென்சி மூலம், முத்ரா கடன்கள் யாருக்கும் கொடுக்கப்படுவதில்லை என PIB விளக்கம் அளித்துள்ளது.
Similar News
News April 1, 2026
கேரளாவில் அடுத்து எந்த ஆட்சி? கருத்துக் கணிப்பில் ட்விஸ்ட்

கேரளாவில் 130 தொகுதிகளில் காங்.,+ 69-81 தொகுதிகளை கைப்பற்றி 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைக்கும் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. மனோரமா நியூஸ் & C-Voter-ன் கருத்து கணிப்பில் ஆளும் CPM+ 57-69 தொகுதிகளிலும், NDA 1-5 தொகுதிகளிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. மக்களிடையே K-Rail திட்டத்துக்கு எதிர்ப்பு, விவசாயிகள் அதிருப்தி, சபரிமலை விவகாரம் உள்ளிட்டவை LDF பின்னடைவுக்கான காரணமாக கூறப்படுகிறது.
News April 1, 2026
ஆணை விட பெண் அதிகமாக தூங்கணும்.. ஏன் தெரியுமா?

ஆண்களை விட பெண்களுக்கு 20 நிமிடங்கள் கூடுதலாக தூக்கம் தேவைப்படுவதாக ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது. பெண்கள் தினமும் Multi-tasking-ல் ஈடுபடுவதால், தங்களுடைய மூளை ஆற்றலை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். ஆகையால், அதற்கேற்ப அவர்களுக்கு போதிய உறக்கம் தேவைப்படுகிறது. தூக்கமின்மை பெண்களுக்கு மன அழுத்தம், பதற்றம், இதய பிரச்னைகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
News April 1, 2026
18,000 குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல்: EPS

திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் 18,000 குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளதாக EPS கூறியுள்ளார். அப்பா என அழைப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்லும் ஸ்டாலினுக்கு, அந்த குழந்தைகள் கதறுவது கேட்கவில்லையா என்றார். நிரந்தர டிஜிபியை நியமிக்க முடியாத அரசு தேவையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் போதைப்பொருள் முற்றிலும் ஒழிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.


