News March 13, 2025
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஈரோடு பேருந்து நிலையத்தில், மார்ச் 15,16 ஆகிய இரு தேதிகளில் இயற்கை சந்தை நடைபெறுகிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம், மகளிர் இயற்கை உரங்கள் மூலம் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா கேட்டு கொண்டு உள்ளார்.
Similar News
News August 18, 2025
பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை மீண்டும் 102 அடியை விரைவில் எட்ட உள்ளதால் மூன்றாவது முறையாக இன்று வினாடிக்கு 5000 முதல் 10000 கன அடி வரை உபரிநீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அதனால் பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க கேட்டுக் கொண்டுள்ளனர்
News August 18, 2025
ஈரோடு: FREE இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

ஈரோடு மக்களே சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு <
News August 18, 2025
பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்!

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி இன்று (18.08.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உட்பட பலர் உள்ளனர்.