News March 13, 2025
பார்க்கிங் தகராறு – பறிபோனது விஞ்ஞானியின் உயிர்

ஜார்க்கண்டைச் சேர்ந்த அபிஷேக் ஸ்வார்ன்கர், ஜெர்மனியில் விஞ்ஞானியாக பணியாற்றியவர். இந்தியா திரும்பிய அவர், மொஹாலியில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட இயக்குநராக வேலை பார்த்து வந்தார். விஞ்ஞானி அபிஷேக் தான் வசித்து வந்த வீட்டின் முன், பைக்கை நிறுத்தக் கூடாது என அக்கம்பக்கத்தினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, நடந்த மோதலில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
Similar News
News March 14, 2025
கோவை சாரதாம்பாள் கோயில்

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் புகழ்பெற்ற சாரதா அம்மன் கோயில் உள்ளது. இங்கு மற்ற சீற்றம் கொண்ட அம்மனை போலல்லாமல், சாரதாம்பாள், இனிமையான முகம், அழகான ஈர்ப்பு, அமைதியான அம்சங்களுடன் காட்சி தருகிறாள். கோவையில் முக்கிய தெய்வங்களில் ஒன்றாகவும், மிகவும் சக்தியவாந்தவளாகவும் விளங்கும் சாரதாம்பாளை வணங்கினால், அனைத்து தடைகளும் நீங்குவதோடு, மன அமைதி கிடைக்குமாம். குடும்பத்துடன் ஒருமுறை சென்று பாருங்க.
News March 14, 2025
எலான் மஸ்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு கண்டிசன்

ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள், எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவையை வழங்க ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், மத்திய அரசு ஸ்டார்லிங்க்கிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. ஸ்டார்லிங்க் இந்தியாவில் கட்டுப்பாட்டு மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதோடு தேவைப்படும் நேரத்தில் மத்திய அரசின் ஏஜென்சிகள் அழைப்புகளை இடைமறிப்பதை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
News March 14, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 உயர்வு

ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை 1 கிராம் தங்கம் ரூ.110 உயர்ந்தது. பின்னர் மாலை ரூ.70 அதிகரித்தது. அதாவது, 1 கிராம் விலை இன்று ஒரே நாளில் ரூ.180 உயர்ந்தது. இதையடுத்து, 1 கிராம் தங்கம் ரூ.8,300ஆகவும், சவரன் ரூ.66,400ஆகவும் விற்கப்படுகிறது. 1 சவரன் தங்கம் விலை ரூ.66 ஆயிரத்தை தாண்டியது, நகை பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.