News March 13, 2025
ஈரோடு: E-KYC பரிவர்த்தனை

ஈரோடு, அஞ்சல் துறை மூலம் சிறுசேமிப்பு திட்டங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்படுகிறது. தற்போது தொழில் நுட்ப மேம்பாட்டை பயன்படுத்தி, படிவம் இன்றி எளிமையாக பரிவர்த்தனை மேற்கொள்ள, ஆதார் அடிப்படையிலான அங்கீகார செயல்முறை (e-KYC) பரிவர்த்தனை திட்டம் அறிமுகமாகி உள்ளது. இவ்வசதி, ஈரோடு கோட்டத்தில் உள்ள ஈரோடு, பவானி, கோபி தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அனைத்து துணை அஞ்சலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 7, 2026
ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தின விழா

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிறப்பான கொண்டாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவர்கள் கேக் வெட்டி, பெண் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
News March 7, 2026
ஈரோடு: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

ஈரோடு மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News March 7, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்! முக்கிய தகவல்

2026 சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் சிறப்புக் காவலர்களாகப் பணியாற்ற 65 வயதிற்குட்பட்ட, உடல்நலனுள்ள முன்னாள் படைவீரர்களுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி அழைப்பு விடுத்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையுடன் ஈரோடு காந்திஜி ரோடு, ஜவான் பவனிலுள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரில் பதிவு செய்துகொள்ளலாம். SHAREIT


