News March 13, 2025
நாகர்கோவில்: 52 வார்டுகளில் குழந்தைகள் பாதுகாப்பு குழு!

நாகர்கோவில் மாநகரில் 52 வார்டுகளிலும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவில் செவிலியர், சமூக ஆர்வலர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், மகளிர் சுய உதவி குழுவினர் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஆகியோர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 12, 2025
கன்னியாகுமரி மக்களே இந்த பக்கம் போகாதீங்க

கன்னியாகுமரி மாவட்டம், காவல்கிணறு நாகர்கோவில் நான்கு வழி சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் இன்று முதல் நடைபெற இருக்கிறது. எனவே கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் வாகனங்கள் காவல் கிணறு நாகர்கோவில் நான்கு வழிச்சாலை ஆரம்பிக்கும் இடத்தில் அணுகு சாலை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.
News September 12, 2025
குமரி: 50% மானியத்தில் கிரைண்டர்!

குமரி மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா?? அப்போ தமிழக அரசு 5000 மானியம் புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்க வயது 25க்கு மேல் இருக்க APPLY பண்ணலாம். வேண்டும். தென்காசி மாவட்ட சமூக நல அலுவரிடம் உங்கள் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பியுங்க.. பெண்களுக்கு SHARE பண்ணி APPLY பண்ண சொல்லுங்க.
News September 12, 2025
அருமனை: அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்த 4 பேர் கைது

அருமனையில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.34 லட்சம் மோசடி செய்ததாக நிதி நிறுவன நிர்வாக இயக்குநர்கள் லிபோரியா (60), சார்லஸ் (57), ராபின் ஜோஸ் (47 ) மற்றும் மேலாளர் அனிஷா (32) ஆகிய 4 பேரை நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவுபோலீசார் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடைய மேலும் 4 பேர்களை போலீசார் தேடி வருகின்றனர்.