News March 13, 2025
மகளிர் உரிமைத் தொகை உயருகிறதா?

மகளிர் உரிமைத்தொகை குறித்து பல்வேறு விவாதங்கள் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளன. அதற்கு காரணம் நாளை தாக்கலாகும் TN Budget. புதுவையில் நேற்றைய பட்ஜெட்டின் போது இந்த நிதி ₹1,000லிருந்து ₹2,500 ஆக உயர்த்தப்பட்டது. கர்நாடகா, மகாராஷ்டிராவில் தலா ₹1,500, பஞ்சாபில் ₹1,200 வழங்கப்படும் நிலையில், இத்திட்டத்திற்கு வித்திட்ட தமிழகத்திலும் ₹2,500ஆக உயர்த்த வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது.உங்கள் கருத்து என்ன?
Similar News
News March 14, 2025
RSS, பாஜகவை மன்னிக்க மாட்டேன்: காந்தி பேரன்

RSS, பாஜகவை மன்னிக்க மாட்டேன், சொன்ன கருத்துக்களையும் திரும்ப பெற மாட்டேன் என காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார். RSS- பாஜக உள்நாட்டு எதிரிகள், துரோகிகள், ஆபத்தானவர்கள் என துஷார் விமர்சித்து இருந்தார். மேலும், அவர்களை எதிர்ப்பது விடுதலை போராட்டத்தை விட முக்கியமானது என கூறியிருந்தார். இந்த கருத்துகளுக்காக துஷாரைக் கைது செய்ய பாஜக வலியுறுத்தியிருந்தது.
News March 14, 2025
540 கோடி VIEWS… ஹாட்ஸ்டாரில் சாம்பியன்ஸ் டிராபி சூப்பர் ஹிட்

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை உலகம் முழுவதும் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் மொத்தம் 540 கோடி பேர் பார்த்துள்ளனர். குறிப்பாக, பைனலில் இந்தியா, நியூசிலாந்து மோதிய போட்டியை 124.2 கோடி பேர் பார்த்துள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் போட்டியை 60.2 கோடி, இந்தியா, ஆஸி. போட்டியை 66.9 கோடி பேர் பார்த்துள்ளனர். இந்திய விளையாட்டுப் போட்டிகள் லைவில் இதுவொரு புதிய சாதனையாகக் கருதப்படுகிறது.
News March 14, 2025
மனைவியிடம் சில்மிஷம்: கணவன் தந்த தண்டனை

உ.பி.,யைச் சேர்ந்த சதீஷின் (45) மனைவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பெண் அருகில் இருந்த கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஊழியராக இருந்த தர்மேந்திர மாவி, அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். இதை அப்பெண் கணவனிடம் கூற, அவர் உறவினர்களுடன் சென்று மாவியின் ஆணுறுப்பை கத்தியால் வெட்டியுள்ளார். இது சரியான தண்டனை என்கின்றனர் நெட்டிசன்கள். நீங்க என்ன சொல்றீங்க?