News March 13, 2025
குமரி: 95 ஊராட்சிகளில் மார்ச் 22-ல் கிராம சபை கூட்டம்!

குமரி மாவட்டத்தில் 95 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் இம்மாதம் 22ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மழை நீரை சேகரித்தல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல், நிலத்தடி நீரைச் செறிவூட்டுதல், தண்ணீர் மாசுபாட்டை தடுத்தல், நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News March 5, 2026
குமரி: பட்டா மாற்றுவது இனி ரொம்ப EASY..

குமரியில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது இந்த <
News March 5, 2026
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை குமரி வருகை

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (6ம் தேதி) குமரி மாவட்டம் வருகிறார். மாலை 4 மணிக்கு அவருக்கு நாகர்கோவிலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. 5 மணிக்கு கல்லடி மாமூடு பகுதியில் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுடன் கலந்துரையாடுகிறார். 6 மணிக்கு குளச்சலில் கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கிறார்.இரவு 7 இறச்சகுளம் பகுதியில் அம்பேத்கர் சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் நெல்லை செல்கிறார்.
News March 5, 2026
நாகர்கோவிலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு..

நாகர்கோவில் மாநகராட்சித் துணைமேயர் மேரி பிரின்சி லதா, வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைமையிடம் அவர் தனது மனுவை முறைப்படி வழங்கினார். மாநகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றி வரும் அவர், தற்போது சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.


