News March 13, 2025
மகளிர்க்கு ரூ.2500 உரிமைத் தொகை: அண்ணாமலை

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் ‘தீய சக்தியை வேரறுப்போம்’ என்ற தலைப்பில் பாஜக சார்பில் நேற்று(மார்ச் 12) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகையில், பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் மகளிர்க்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்றார்.
Similar News
News September 12, 2025
தென்காசி: எடப்பாடியை கண்டித்து போஸ்டர்

தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மதுரை விமான நிலையம் குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இரு சமூகத்தினர் இடையே பிரிவினையை தூண்டி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி அரசியல் ஆதாயம் தேடும் எடப்பாடி பழனிச்சாமியை கண்டிப்பதாக போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.
News September 12, 2025
மனைவியை கொலை செய்ய முயன்ற கணவருக்கு சிறை

தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேல மெஞ்ஞானபுரம் பகுதியைச் சார்ந்த ஏழுமலை என்பவர் அவரது மனைவி கலா என்பவரை கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட மோதலில் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி மேற்கொண்ட வழக்கில் தென்காசி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிரிஸ்டல் பபிதா ஏழுமலைக்கு நான்காண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு.
News September 12, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று செப்டம்பர் 11ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.