News March 13, 2025

இந்திய பெருங்கடலில் இனி இந்தியாவே ராஜா! (1/2)

image

மொரிஷியஸ் சென்ற பிரதமர் மோடி, அங்கு நடந்த தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். போர்ட் லூயிஸில் நடந்த விழாவில் இந்தியாவின் பலத்தை பறைசாற்றும் வகையிலான அணிவகுப்பும் நடந்தது. பின்னர் மொரிஷியஸ் பிரதமர் நவீன்சந்திராவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க மஹாசாகர் கொள்கையை கடைபிடிக்க இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

Similar News

News March 14, 2025

எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

image

பள்ளிக்கல்விக்கு ₹46,767 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சிக்கு ₹26,678 கோடி, உள்ளாட்சிக்கு ₹29,465 கோடி, மின்துறைக்கு ₹21,178 கோடி, மக்கள் நல்வாழ்வுக்கு ₹21,906 கோடி, நெடுஞ்சாலைக்கு ₹20,722 கோடி, போக்குவரத்துக்கு ₹12,964 கோடி, நீர்வளத்துக்கு ₹9,460 கோடி, உயர்கல்விக்கு ₹8,494 கோடி, MSMEக்கு ₹5,833 கோடி, ஆதிதிராவிடர், பழங்குடியினத் துறைக்கு ₹3,924 கோடி ஒதுக்கீடு.

News March 14, 2025

2,562 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்!

image

தமிழக பட்ஜெட்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். அதன்படி, 2025-26ஆம் ஆண்டில் 1,721 முதுநிலை ஆசிரியர்களும், 841 பட்டதாரி ஆசிரியர்களும் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள் என, பட்ஜெட் உரையில்
அவர் குறிப்பிட்டார்.

News March 14, 2025

தவறுகளை மறைக்கவே ரூபாய் குறியீடு: இபிஎஸ் விமர்சனம்

image

3.50 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது 40,000 பணியிடங்களை மட்டுமே நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். அதுவும் இந்த பணியிடங்களை 9 மாதங்களில் எப்படி நிறைவேற்ற முடியும் என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக அரசு செய்த தவறுகளை மறைக்கவே ரூபாய் குறியீடு மாற்றப்பட்டுள்ளதாக விமர்சித்த அவர், திமுக அரசு மீது மக்கள் கோபத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!