News March 13, 2025
மொரிஷியஸூடன் 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து (2/2)

இந்தியா – மொரிஷியஸ் இடையே பரஸ்பரம் உள்ளூர் கரன்சியில் வர்த்தகம், கடல்சார் தகவல் பரிமாற்றம், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு, குறு, சிறு, நடுத்தர தொழில் துறையை விரிவாக்குவது உள்ளிட்ட 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மேலும், மொரிஷியஸில், இந்திய நிதி உதவியுடன் கடலுக்கு அடியில் பைப் லைன் அமைப்பது, ENT மருத்துவமனை கட்டுவது உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களும் நிறைவேற்றப்படவுள்ளன.
Similar News
News March 14, 2025
சென்னையில் 4 வழித்தட உயர்மட்ட சாலை!

சென்னை ECR சாலையில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 14.2 கி.மீ தூரத்திற்கு ரூ.2,100 கோடி மதிப்பீட்டில் 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்படுகிறது. மேலும், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலைக்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 14, 2025
அறிவியல், கணித ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு ₹100 கோடி!

சென்னை, கோவையில் அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சிப் படிப்புகள் மையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ₹100 கோடி ஒதுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அண்ணா பல்கலை. சிறந்த கல்வி நிறுவனமாக தரவரிசையில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 5 ஆண்டுகளில் ₹500 கோடியில் பணிகள் நடந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
News March 14, 2025
டெல்லி அணியின் கேப்டனான அக்ஷர் பட்டேல்

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஆல் ரவுண்டர் அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட், தற்போது லக்னோ அணிக்காக விளையாட உள்ளார். டெல்லி அணியின் கேப்டன் பதவிக்கு கே.எல்.ராகுலுடன் போட்டி நிலவிய நிலையில், அக்ஷருக்கு பதவி கிடைத்துள்ளது. CT தொடரிலேயே ராகுலின் 5ஆவது இடத்தில் அக்ஷர் விளையாடியது குறிப்பிடத்தக்கது. இந்த முறையாவது டெல்லி கோப்பையை வெல்லுமா?