News March 13, 2025
மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா பட்ஜெட்?

சட்டசபையில் நாளை மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பற்றி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, அதுதொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும், பெண்கள், இளைஞர்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 14, 2025
கும்பகோணம் தனி மாவட்டமாகுமா?

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட ஆண்டுகால கோரிக்கையாகும். இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள பட்ஜெட் தொடரில் கும்பகோணம் தனிமாவட்டமாக அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தஞ்சை மக்களே இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்ட் செய்யவும். மேலும், Share பண்ணுங்க.
News March 14, 2025
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.. ₹3 லட்சம் நிவாரணம்

சேலத்தில் பணியின்போது தண்ணீர் தொட்டியின் மீதிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சுப்ரமணி (55) என்பவரது குடும்பத்திற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து சுப்ரமணியின் குடும்பத்திற்கு ₹3 லட்சம் நிதியுதவி வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.
News March 14, 2025
200% வரி விதிப்பு: டிரம்ப் அதிரடி

அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் வரி விதித்துள்ளதால், ஐரோப்பிய நாடுகளில் தயார் செய்யப்படும் ஒயின், ஷாம்பெயின் மற்றும் மதுபானங்களுக்கு 200% வரியை டிரம்ப் அறிவித்து அதிரடி காட்டியுள்ளார். அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் நாடுகள், அதிக வரி விதிக்கக் கூடாது என டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த புதிய வரி விதிப்பு ஏப்.1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.