News March 13, 2025

நெல்லை ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.99.82 கோடி – எம்பி

image

நெல்லை எம்.பி ராபர்ட் ப்ரூஸ் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நெல்லை ரயில் நிலையத்தை மேம்படுத்த அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.99.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகையில் கிழக்கு ,மேற்கு வாயில்கள் கட்டடங்கள், பாலங்கள், நடைமேடைகள், பார்சல் சர்வீஸ் மேம்படுத்துதல் போன்றவை செயல்படுத்தப்படவுள்ளது. கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது என்றார்.ஷேர் பண்ணுங்க

Similar News

News March 8, 2026

திருநெல்வேலி கலெக்டர் அதிரடி!

image

சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் 7 பிடிஓ பணியிட மாறுதல் செய்து மாவட்ட கலெக்டர் சுகுமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அம்பை பிடிஓ பொன்னுலட்சுமி நெல்லை தெற்கு உதவி இயக்குனர் பி டி ஓவாக மாற்றப்பட்டுள்ளார். இந்த பணியில் இருந்த உலகம்மாள் அம்பைக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார். வள்ளியூர் பிடிஓ மனோகர் மானூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

News March 8, 2026

திருநெல்வேலி: கார் விபத்தில் திமுக நிர்வாகி பலி

image

தாழையூத்தை அடுத்த சங்கர் நகர் சாரதாம்பாள் நகரை சேர்ந்த ராஜா மணி. (பேரூா் திமுக அவைத்தலைவர்) நேற்று முந்தினம் இரவு அங்குள்ள நான்கு வழிச்சாலையில் ரயில்வே மேம்பால பகுதியில் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத கார் மோதி படுகாயம் அடைந்தார். பாளை GH-ல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ராஜாமணி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

News March 8, 2026

நெல்லையில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்படி இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!