News March 13, 2025
காட்டு மாடு தாக்கி குமரியை சேர்ந்த வன ஊழியர் உயிரிழப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு ஊராட்சி, கூவக்காட்டுமலை பகுதியை சேர்ந்த அசோக்குமார் கோவை மாவட்டத்தில் வனத்துறை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது காட்டுமாடு தாக்கி உயிரிழந்தார். அசோக்குமார் உடல் வனத்துறையினர் மரியாதை செலுத்திய பின்னர் நேற்று(மார்ச் 12) சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.
Similar News
News March 14, 2025
குமரியில் 13 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் துணைத் தாசில்தார்கள் நிலையில் 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீதித்துறை பயிற்சி நிறைவு பெற்ற 8 துணை தாசில்தார் களான மீனாகுமாரி,துர்கா ரவீந்திரன், பாஞ்சாலி ஆறுமுகம் மகேஷ் மாரியப்பன் உட்பட 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று பிறப்பித்தார்.
News March 14, 2025
மகளின் கழுத்தை அறுத்த தாய் மீது வழக்கு

நெய்யூரைச் சேர்ந்தவர் விஜிலின் சாம் (44). இவர் மனைவி மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர். இந்நிலையில் அவர் அவரது மகள் விஜோலின் தீபா கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக இரணியல் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News March 13, 2025
குமரியில் டாட்டூ குத்திய 6 பேருக்கு எச். ஐ.வி பாதிப்பு

குமரி மாவட்டத்தில் டாட்டூ எனும் பச்சை குத்துவதால் தோல் நோய்கள் அதிகரித்துள்ளது என்றும் கடந்த 2 ஆண்டுகளில் 6 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் மாதம் 30 பேர் டாட்டூவினால் ஏற்படும் பிரச்சனைக்காக வருகின்றனர் என ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையின் தோல் நோய் மருத்துவ பிரிவு பேராசிரியர் பிரேம் சாந்த் தெரிவித்துள்ளார்.*தெரிந்தவர்களுக்கு பகீர்ந்து உஷார் படுத்தவும்*