News March 13, 2025
மாசி மக பெளர்ணமியில் ஈசனை வழிபடுவோம்!

மாசி மக பெளர்ணமியான இன்று சிவ வழிபாடு அனைவருக்கும் நன்மையை ஏற்படுத்தும். சந்திரனும், சூரியனும் நேருக்கு நேர் சந்திக்கும் நாள் தான் பெளர்ணமியாக கூறப்படுகிறது. இன்றைய தினத்தில் சூரிய, சந்திர வழிபாடும் எடுத்த காரியத்தில் வெற்றியைத் தரும். அதிலும் மாசி மாதத்தில் வரும் இந்த நிறைந்த பெளர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதும் சாலச் சிறந்தது.
Similar News
News March 14, 2025
மீண்டும் பாமகவுடன் நெருக்கம் காட்டும் பண்ருட்டி வேல்முருகன்

எலியும், பூனையுமாக இருந்த பாமக, தவாக மீண்டும் நெருக்கம் காட்ட ஆரம்பித்துள்ளது. வேல்முருகனை சந்தித்த பாமக நிர்வாகிகள், அக்கட்சியின் நிழல் பட்ஜெட் நகலை வழங்கினர். இதனை X பக்கத்தில் பகிர்ந்துள்ள வேல்முருகன், ‘அய்யா, சின்னய்யாவுக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார். பாமகவிலிருந்து விலகிய பிறகு ராமதாஸ், அன்புமணியை கடுமையாக விமர்சித்து வந்த வேல்முருகனின் இந்த திடீர் மனமாற்றம் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.
News March 14, 2025
பிரபல வீரருக்கு IPL-லில் விளையாட 2 ஆண்டுகள் தடை

ஐபிஎல் விதிகளை மீறியதற்காக இங்கிலாந்து வீரர் ஹாரி புருக்குக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. நடப்பாண்டு IPLல சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியால் ₹6.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட அவர், இறுதி நேரத்தில் தன்னால் அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என தெரிவித்தார். இது விதிகளுக்கு புறம்பானது என்பதால் ஹாரி புருக் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.
News March 14, 2025
லடாக், இமாச்சலில் நிலநடுக்கம்

லடாக்கின் கார்கிலில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. கார்கிலில் அதிகாலை 2.50 மணிக்கு பூமிக்கடியில் 15 கி.மீ ஆழத்தில் மையமாக கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவாகியுள்ளது. இதன் தாக்கம் ஜம்மு – காஷ்மீர், இமாச்சல் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். நிலநடுக்க பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.