News March 13, 2025
ODI WC-2027: ரோஹித்தின் முக்கிய முடிவு?

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முக்கிய முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. ODI WC-2027 வரை விளையாட முடிவு செய்துள்ள அவர், உடற்தகுதியில் கவனம் செலுத்த உள்ளார். இதற்காக இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும், அவரிடம் பேட்டிங் மற்றும் ஃபிட்னஸ் டிப்ஸ்களை பெறுவார் என்றும் கூறப்படுகிறது. அபிஷேக் IPLல், தினேஷ் கார்த்திக்கிற்கு வழிகாட்டியாக இருந்தார்.
Similar News
News August 6, 2025
ஆகஸ்ட் 6: வரலாற்றில் இன்று

*1945 – 2ம் உலகப்போரில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா அணு குண்டுகளை வீசியதில் 70,000 பேர் கொல்லப்பட்டனர். *1996 – செவ்வாயில் இருந்து தோன்றியதாகக் கருதப்படும் ALH 84001 என்ற விண்கல் ஆரம்பகால உயிரினங்கள் பற்றிய தகவலைக் கொண்டிருப்பதாக நாசா அறிவித்தது. *2012- நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கோளில் தரையிறங்கியது. *2019- முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உயிரிழந்த நாள்.
News August 6, 2025
வெள்ளத்தில் சிக்கி 11 வீரர்கள் மாயம்

உத்தரகாண்ட் மேகவெடிப்பால் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில், அங்கிருந்த ராணுவ முகாமும் அடித்து செல்லப்பட்டது. இதில் மீட்புபணிகளுக்குச் சென்ற 11 ராணுவ வீரர்கள் மாயமானதாக அஞ்சப்படுகிறது. அம்மாநிலத்தில் இன்று மதியம் 1:45 மணிக்கு மேகவெடிப்பு பெருவெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுவரை 130 பேரை மீட்டுள்ளதாக அம்மாநில CM புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
News August 6, 2025
‘ராஞ்சனா’ ரி-ரிலீஸ்.. தனுஷ் வழக்கு

‘ராஞ்சனா’ படத்தின் கிளைமாக்ஸை AI வைத்து மாற்றி ரி-ரிலீஸ் செய்ததை எதிர்த்து தனுஷுடன் சேர்ந்து வழக்கு தொடர உள்ளதாக அப்படத்தின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் தெரிவித்துள்ளார். 2013-ல் வெளியான இப்படத்தின் கிளைமாக்ஸில் தனுஷ் இறந்துவிடுவார். ஆனால், அவர் உயிருடன் இருந்து மகிழ்ச்சியாக படம் முடிவது போல் தற்போது எடிட் செய்யப்பட்டுள்ளது. இது வலியை தருவதாக இருவரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.