News March 13, 2025
நிதிஷ் பாங்கு குடித்துவிட்டு சட்டப்பேரவை வருகிறார்: ராப்ரி

பிஹார் CM நிதிஷ்குமார் பாங்கு குடித்துவிட்டு சட்டப்பேரவை வருவதாக ஆர்ஜேடி மூத்த தலைவர் ராப்ரி தேவி குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமார் நிலையானவராக இல்லை என்றும், அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவையில் பெண் எம்எல்ஏக்களை நிதிஷ், தேஜ கூட்டணி கட்சியினர் அவமதிப்பதாக கூறி, ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
Similar News
News August 6, 2025
USA vs ரஷ்யா: அணு ஆயுத போர்?

அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே 500-5,500 கி.மீ., தொலைவில் அணு ஆயுதங்களை நிறுத்தக்கூடாது என்ற ஒப்பந்த விதிகளை மீறி ஐரோப்பியா, ஆசியாவில் அமெரிக்கா அணு ஆயுதங்களை நிறுத்தி ரஷ்யாவை அச்சுறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், கடந்த 2019ம் ஆண்டிலேயே அமெரிக்கா ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிவிட்டது.
News August 6, 2025
வள்ளலார் பொன்மொழிகள்

*எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் வியாபித்திருக்கிறார் என்று அறிதலே கடவுள் பக்தியாகும். *சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு அவனை அறிமுகப்படுத்துகின்றன. *அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை. உண்மையைச் சொல் அது உனது மரியாதையை பாதுகாக்கும். மனதை அடக்க நினைத்தால் அடங்காது, அதை அறிய நினைத்தால் அடங்கும். தவறு செய்வதும் மனம் தான். இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் மனம் தான்.
News August 6, 2025
கருண் நாயரின் கெரியர் முடிந்ததா?

ராஞ்சி டிராபியில் 863 ரன்கள் அடித்து, 9 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர், IND vs ENG டெஸ்ட் தொடரில் கடுமையாக சொதப்பினார். இந்த தொடரில் வெறும் 205 ரன்களை மட்டுமே எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர், தனது ஃபார்மை நிரூபிக்காததால், தேர்வுக்குழுவும், ரசிகர்களும் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். இதனால் அடுத்து அணியில் இடம்பெறுவது கடினம் என்கின்றனர்.