News March 13, 2025

நிதிஷ் பாங்கு குடித்துவிட்டு சட்டப்பேரவை வருகிறார்: ராப்ரி

image

பிஹார் CM நிதிஷ்குமார் பாங்கு குடித்துவிட்டு சட்டப்பேரவை வருவதாக ஆர்ஜேடி மூத்த தலைவர் ராப்ரி தேவி குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமார் நிலையானவராக இல்லை என்றும், அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவையில் பெண் எம்எல்ஏக்களை நிதிஷ், தேஜ கூட்டணி கட்சியினர் அவமதிப்பதாக கூறி, ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

Similar News

News March 14, 2025

சுங்கச்சாவடிகள் மூடப்படாது: மத்திய அமைச்சர்

image

சுங்கச்சாவடிகள் நிரந்தரமானவை, அவை மூடப்படாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். போட்ட முதலீடுகள் திரும்ப கிடைத்ததும், சுங்கச்சாவடிகள் மூடப்படுமா என மாநிலங்களவையில் திமுக MP வில்சன் கேள்வி எழுப்பினார். இதற்கு, தனியார் உதவியுடன் அமைக்கப்படும் சாலைகளில் ஒப்பந்த காலம் முடியும் வரை அந்நிறுவனங்கள் கட்டணத்தை வசூலிக்கலாம். பின் அரசு நேரடியாக வசூலிக்கும் என கட்கரி பதிலளித்தார்.

News March 14, 2025

இன்றைய பொன்மொழிகள்!

image

▶விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை. ▶கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான மரண போராட்டம் தான் புரட்சி. ▶உன்னை அதிகம் விமர்சிப்பவனே உன்னை கண்டு அதிகம் பயப்படுகிறான். ▶ஒரு புரட்சியாளன் என்பவன் தனது இலட்சியத்தை ஒளிவு மறைவின்றி தனது பகைவர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். ▶தடம் பார்த்து நடப்பவன் மனிதன்; தடம் பதித்து நடப்பவன் புரட்சியாளன்.
– பிடல் காஸ்ட்ரோ.

News March 14, 2025

மருந்து தட்டுப்பாடு கூடாது; அமைச்சர் உத்தரவு

image

முதல்வர் மருந்தகங்களில் தட்டுப்பாடு இன்றி மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் உத்தரவிட்டுள்ளார். மருந்தகங்களில் வாடிக்கையாளர்களை மரியாதையோடு நடத்துமாறும், கேட்கும் மருந்துகள் இல்லை என திருப்பி அனுப்பாமல் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். தேவையான மருந்துகள் 48 மணி நேரத்துக்குள் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

error: Content is protected !!