News March 31, 2024

சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி

image

புதுச்சேரியில் கழிவுநீர் வாய்க்காலை தூர்வாரும் போது சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகினர். மரப்பாலம் பகுதியில் உள்ள மின்சாரத்துறை அலுவலகம் அருகே இருந்த கழிவுநீர் வாய்க்காலை 16 பேர் தூர் வாரினர். அப்போது மின்துறை அலுவலகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து நிகழ்விடத்திலேயே 3 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இருவர் பலியாகினர்.

Similar News

News August 14, 2025

சஞ்சு வேணும்… ஆனாலும் RRக்கு NO சொன்ன CSK!

image

சஞ்சு சாம்சனுக்கு பதில் CSK-வில் இருந்து ஜடேஜா, ருதுராஜ் அல்லது ஷிவம் துபேவை தருமாறு <<17395146>>ராஜஸ்தான் கேட்டதாக <<>>தகவல் வெளியானது. சஞ்சு சாம்சனை வாங்குவதில் CSK தீவிரமாக இருந்தாலும், தங்களது அணிக்கு தூண்களாக இருக்கும் மூவரில் ஒருவரை கூட விட்டுக்கொடுக்க விரும்பவில்லையாம். சென்னை ஒத்துவராத நிலையில் வேறு சில அணிகள் சஞ்சுவை வாங்க முயற்சித்து வருகின்றனவாம். சஞ்சு வேறு எந்த அணிக்கு போக வாய்ப்பிருக்கு?

News August 14, 2025

நடிகை மினு முனீரை கைது செய்த சென்னை போலீஸ்

image

பாலியல் புகாரில் கேரள நடிகை மினு முனீரை சென்னை போலீஸ் அதிரடியாக கைது செய்துள்ளது. 14 வயது சிறுமியை சின்னத்திரையில் நடிக்க வைப்பதாக சென்னைக்கு அழைத்து வந்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுதொடர்பான புகாரில் மினு முனீரை கைது செய்த போலீசார், கேரளாவில் இருந்து சென்னைக்கு அழைத்து வருகின்றனர். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு, முன்னணி நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறி அதிரவைத்தவர் இவர்.

News August 14, 2025

மக்களின் தியாகத்தை போற்றுவோம்: PM மோடி

image

பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து 1947 ஆக.14-ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. அப்போது நிகழ்ந்த வன்முறை, வெறுப்பு, துன்புறுத்தல்கள் காரணமாக பலர் உயிரிழந்தனர். அவர்களின் தியாகத்தை போற்றி இந்நாள் பிரிவினை கொடுமையின் நினைவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், மக்களின் போராட்டங்கள், தியாகங்களை நினைவுகூர்ந்து, தேச ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துவோம் என PM மோடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!