News March 12, 2025
81 நாட்களுக்கு தண்ணீர் திறக்கு அரசு உத்தரவு

நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் தேவைக்காக நீர்வளத்துறை மூலம் கோதை ஆறு பாசன திட்ட அணைகளில் இருந்து இன்று (12.03.2025) முதல் 31.05.2025 வரையிலான இடைப்பட்ட 81 நாட்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களின் நலன் கருதி 21.27 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Similar News
News September 13, 2025
குமரி: குழந்தையை கொன்ற தாய்

காட்டு விளையை சேர்ந்தவர் பெனிட்டா ஜெய அன்னாள். இவருக்கு 40 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. கீழே விழுந்த குழந்தை இறந்துவிட்டதாக தாய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருங்கல் போலீசார் விசாரணை நடத்தியதில் குழந்தை பிறந்தது முதல் கணவர் குழந்தையின் தாயிடம் பேசாததால் குழந்தை வாயில் பேப்பரை திணித்து தாய் கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
News September 13, 2025
குமரி மக்களே உங்க வேலையை வேகமாக முடிங்க!

நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை மின் நிலையத்தில் 13.09.2025 (சனிக்கிழமை) இன்று காலை 9 மணி – மதியம் 3 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரிசெய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே உங்க பணிகளை சீக்கிரம் முடிங்க.SHARE பண்ணுங்க…
News September 13, 2025
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி கடும் எச்சரிக்கை

நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் இன்று நடைபெற்ற சோதனையில் 1.5 கிலோ கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய கார் பைக் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை மேலும் தீவிரபடுத்தப்படும். போதை பொருள் விற்பனை செய்பவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.