News March 12, 2025

81 நாட்களுக்கு தண்ணீர் திறக்கு அரசு உத்தரவு

image

நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் தேவைக்காக நீர்வளத்துறை மூலம் கோதை ஆறு பாசன திட்ட அணைகளில் இருந்து இன்று (12.03.2025) முதல் 31.05.2025 வரையிலான இடைப்பட்ட 81 நாட்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களின் நலன் கருதி 21.27 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Similar News

News March 13, 2025

குமரியில் டாட்டூ குத்திய 6 பேருக்கு எச். ஐ.வி பாதிப்பு

image

குமரி மாவட்டத்தில் டாட்டூ எனும் பச்சை குத்துவதால் தோல் நோய்கள் அதிகரித்துள்ளது என்றும் கடந்த 2 ஆண்டுகளில் 6 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் மாதம் 30 பேர் டாட்டூவினால் ஏற்படும் பிரச்சனைக்காக வருகின்றனர் என ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையின் தோல் நோய் மருத்துவ பிரிவு பேராசிரியர் பிரேம் சாந்த் தெரிவித்துள்ளார்.*தெரிந்தவர்களுக்கு பகீர்ந்து உஷார் படுத்தவும்*

News March 13, 2025

நாகர்கோவில்: 52 வார்டுகளில் குழந்தைகள் பாதுகாப்பு குழு!

image

நாகர்கோவில் மாநகரில் 52 வார்டுகளிலும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவில் செவிலியர், சமூக ஆர்வலர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், மகளிர் சுய உதவி குழுவினர் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஆகியோர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 13, 2025

குமரி: 95 ஊராட்சிகளில் மார்ச் 22-ல் கிராம சபை கூட்டம்!

image

குமரி மாவட்டத்தில் 95 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் இம்மாதம் 22ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மழை நீரை சேகரித்தல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல், நிலத்தடி நீரைச் செறிவூட்டுதல், தண்ணீர் மாசுபாட்டை தடுத்தல், நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

error: Content is protected !!