News March 12, 2025
3 மொழிகள் படிப்பதால் என்ன தவறு? சுதா மூர்த்தி

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், ராஜ்ய சபா எம்பியுமான சுதா மூர்த்தி, மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பேசியுள்ளார். தனக்கு 7 முதல் 8 மொழிகள் தெரியும் எனவும், அதனால் குழந்தைகள் பல மொழிகளை கற்பது அவர்களுக்கு மிகவும் பயன்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு vs தமிழ்நாடு அரசு இடையேயான மோதல் முற்றி வரும் நிலையில், அவர் இப்படி கூறியுள்ளார்.
Similar News
News March 16, 2026
கஞ்சா விற்பனையால் பாலியல் தாக்குதல்: அண்ணாமலை

திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில், TN முழுவதும் கஞ்சா புழக்கம் பெருகியுள்ளதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் சேலம் கோரிமேட்டில் 66 வயது மூதாட்டியை, கஞ்சா போதையில் 2 பேர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கும் சம்பவத்தை அதிர்ச்சியுடன் சுட்டிக்காட்டியுள்ளார். கஞ்சா விற்பனையில் பெரும்பாலும் திமுகவினரே ஈடுபடும் நிலையில் உடனடியாக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் கோரியுள்ளார்.
News March 16, 2026
BREAKING: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

+2 பொதுத்தேர்வு முடிவுகளை மே 8-ம் தேதி வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது. மார்ச் 26-ம் தேதியுடன் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நிறைவடைகின்றன. இதனையடுத்து, ஏப்.9-ம் தேதி முதல் ஏப்.20-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் என்றும் அரசு தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. அதேபோல், 11-ம் வகுப்புக்கான அரியர் தேர்வு முடிவுகளை மே 20-ம் தேதி வெளியிடவும் அரசு திட்டமிட்டுள்ளதாம். SHARE IT
News March 16, 2026
ரசகுல்லாவால் பறிபோன உயிர்!

ஜார்க்கண்டில் திருமண நிகழ்ச்சியில் உற்சாகமாக பேசி சிரித்து கொண்டிருந்த தருணத்தில், லலித் சிங்(41) ரசகுல்லாவை சாப்பிட்டுள்ளார். அது அவரது தொண்டையில் சிக்கி கொள்ள, மூச்சுவிட முடியாமல் துடித்துள்ளார். அங்கிருந்தவர்கள் ரசகுல்லாவை எடுக்க முயன்றும் பலனளிக்காத்தால், அவரை உடனே ஹாஸ்பிடலுக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆனால், மூச்சு குழாயை ரசகுல்லா அடைத்ததால், அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


