News March 12, 2025
3 மொழிகள் படிப்பதால் என்ன தவறு? சுதா மூர்த்தி

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், ராஜ்ய சபா எம்பியுமான சுதா மூர்த்தி, மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பேசியுள்ளார். தனக்கு 7 முதல் 8 மொழிகள் தெரியும் எனவும், அதனால் குழந்தைகள் பல மொழிகளை கற்பது அவர்களுக்கு மிகவும் பயன்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு vs தமிழ்நாடு அரசு இடையேயான மோதல் முற்றி வரும் நிலையில், அவர் இப்படி கூறியுள்ளார்.
Similar News
News March 14, 2025
தமிழக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் ஆகிறது

TN அரசின் 2025-2026ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டினை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். அடுத்தாண்டு, தேர்தலையொட்டி இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் ஆகும் என்பதால், ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். அதனால், ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்படலாம். குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 14, 2025
சாம்பியன்ஸ் டிராபி.. RECORD VIEWS

JioHotstarல் ஒளிபரப்பப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் 540 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. IND vs NZ இறுதிப்போட்டி மட்டும் 124.2 கோடி பார்வைகளை பெற்று, அதிகம் பேர் நேரலையில் பார்த்த கிரிக்கெட் போட்டியாக இது அமைந்துள்ளது. அத்துடன், ஹாட்ஸ்டாரில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்கள் இந்த போட்டியின் போது பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளது.
News March 14, 2025
இன்று முதல் ஆரோக்யா பால் லிட்டருக்கு ₹4 உயர்வு

ஆரோக்யா பால் விலை லிட்டருக்கு ₹4ம், தயிர் விலை ₹3ம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, நிறை கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ₹76ல் இருந்து ₹80ஆகவும், 400 கிராம் தயிரின் விலை ₹32இல் இருந்து ₹33ஆகவும் உயர்ந்துள்ளது. அத்துடன், பால், மோர் பாக்கெட் அளவுகளில் 125 ML, 120 ML ஆகவும், 180 ML, 160 ML ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது தமிழகம் முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.