News March 12, 2025
மரடோனா மரண வழக்கு: விசாரணை தொடங்கியது

கால்பந்து விளையாட்டு ஜாம்பவனான அர்ஜென்டினாவின் மரடோனா (60) 2020இல் மாரடைப்பால் காலமானார். அதற்கு முன்பு ரத்த உறைதல் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீட்டுக்கு திரும்பியிருந்தார். இதனால் மருத்துவ குழுவின் கவனக்குறைவே மரணத்திற்கு காரணமென குற்றஞ்சாட்டி 8 பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. 8 பேர் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படக்கூடும்.
Similar News
News March 13, 2025
இன்றைய பொன்மொழிகள்!

* உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
* நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்.
* பிறரது பாராட்டுக்கும், பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
* உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.
*எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ் – விவேகானந்தர்.
News March 13, 2025
இயக்குநராகும் நடிகர் ரவிமோகன்

தனுஷை தொடர்ந்து, நடிகர் ரவிமோகனும் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பராசக்தி, கராத்தே பாபு உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், இயக்குநர் பணியை தொடங்க உள்ளார். யோகி பாபுவை ஹீரோவாக வைத்து தான் இயக்க உள்ளாராம். இதனை யோகி பாபுவே உறுதிப்படுத்தியுள்ளார். இப்படி, நடிகர்கள் எல்லாம் இயக்குநர் அவதாரம் எடுத்தால், நாங்க எங்க போறது என இயக்குநர்கள் குமுறுகின்றனர்.
News March 13, 2025
WPL: வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு தகுதி

WPL 2025ல் இன்று மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே எலிமினேட்டர் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இத்தொடரில் இதுவரை குஜராத் அணிக்கு எதிராக MI தோல்வியடைந்தது இல்லை. அதனால், இன்றைய போட்டி சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாமல் இருக்கும். மறுபுறம், டெல்லி அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்டது. இறுதிப் போட்டி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.