News March 12, 2025
₹87 லட்சம் கோடி காலி

கடும் சரிவை சந்தித்துவரும் இந்திய பங்குச்சந்தைகள், சுமார் $1 ட்ரில்லியன் சந்தை மதிப்பை இழந்திருப்பதாக அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்திய ரூபாயின் மதிப்பில் ₹87 லட்சம் கோடி. கடந்த டிசம்பர் மாதம் உச்சம் தொட்ட நிஃப்டி, அதிலிருந்து 16% மதிப்பினை இழந்திருக்கிறது. சிறிய நிறுவனங்கள் பெரும் சரிவை கண்டிருக்கின்றன. இதனால், முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
Similar News
News August 21, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.20) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
News August 21, 2025
கஸ்டமர்களை ஏமாற்றிய Rapido.. ₹10 லட்சம் அபராதம்

ஆட்டோ கேரண்டி, கேஷ்பேக் சலுகைகள் என விளம்பரங்களை வெளியிட்டு கஸ்டமர்களை தவறாக வழிநடத்தியதாக Rapido நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ₹10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ‘5 நிமிடத்தில் ஆட்டோ கிடைக்கவில்லையென்றால் ₹50 கேஷ்பேக்’ என விளம்பரத்தை வெளியிட்டு, பணத்திற்கு பதிலாக Rapido காயின்களை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹50 பணமாக கொடுக்கும்படி ஆணையிட்டுள்ளது.
News August 21, 2025
சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் இல்லை

குண்டும், குழியுமாக இருக்கும் ரோட்டில் பயணிப்பதை விட அதற்கு செலுத்துவது தான் கட்டுவதுதான் கொடுமையானது. இந்த நிலையில்தான், கேரளாவில் சேதமடைந்து இருக்கும் NH-544 சாலைக்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தரமான சாலை வசதியை NHAI, மக்களுக்கு அமைத்து தர வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. இது அனைத்து டோல்கேட்டிலும் வந்தால் எப்படி இருக்கும்?