News March 12, 2025
மகாராஷ்டிராவில் தீவிரமாகும் ஹலால் மட்டன் எதிர்ப்பு

மகாராஷ்டிராவில் ஹலால் மட்டன் எதிர்ப்பு இயக்கம் தீவிரமாகிறது. இதற்கு அமைச்சர் நிதிஷ் ரானே தலைமை வகிக்கிறார். அவருக்கு தேஜகூ தலைவர்கள் ஆதரவு அளிக்கின்றனர். ஆடு, காேழி ஆகியவற்றை இந்து மத வழக்கப்படி கொல்லும் ஜத்கா முறையை ஊக்குவிக்கின்றனர். ஹலால் சான்றுக்கு பதிலாக மல்ஹர் சான்று அறிமுகப்படுத்தப்பட்டு, ஜத்கா கடைகள் ஒரே குடையின்கீழ் கொண்டு வரப்படுகின்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
Similar News
News March 26, 2026
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது

மஹாவீர் ஜெயந்தியையொட்டி மார்ச் 31-ம் தேதி தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் உத்தரவை மீறி கடையை திறந்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. SHARE IT
News March 26, 2026
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது

மஹாவீர் ஜெயந்தியையொட்டி மார்ச் 31-ம் தேதி தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் உத்தரவை மீறி கடையை திறந்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. SHARE IT
News March 26, 2026
போர் நெருக்கடி.. CM-களுடன் நாளை மோடி ஆலோசனை

அனைத்து மாநில CM-களுடன் PM மோடி நாளை மாலை ஆலோசனை நடத்தவுள்ளார். காணொலி வழியாக நடக்கும் இக்கூட்டத்தில் மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படும். நடத்தை விதிகள் காரணமாக தேர்தல் நடைபெறும் 5 மாநில CM-கள் இதில் பங்கேற்க மாட்டார்கள். பதிலாக அம்மாநில தலைமை செயலர்களுக்கு தனியே கூட்டம் நடத்தப்படும்.


