News March 12, 2025
கார் கண்ணாடியில் சிக்கி குழந்தை பலி

லக்னோவில் கார் கண்ணாடி தானாக மூடியதால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோஷன் என்பவர் புதிய காரை வாங்கி குடும்பத்தை கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, குழந்தை ஒன்று தலையை வெளியே நீட்டியிருக்க, டிரைவர் காரை ஆன் செய்துள்ளார். அப்போது, கண்ணாடி தானாக உயர்ந்ததால் குழந்தையின் கழுத்து சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
Similar News
News July 10, 2025
REWIND: ரஜினி, கமல் பட நடிகையின் துயர மரணம்

ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்தவர் நிசா நூர். பாலசந்தர், விசு உள்ளிட்டோரின் இயக்கத்திலும் அவர் நடித்துள்ளார். இதில் ஸ்ரீ ராகவேந்திரா, டிக் டிக் டிக், இளமை கோலம், எனக்காக காத்திரு, கல்யாண அகதிகள் படங்கள் முக்கியமானவை ஆகும். பிரபல நடிகர்களுடன் நடித்தும் உச்சம் செல்லாத நிசா, வறுமை நிலை சென்றார். விபசாரத்திலும் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் எய்ட்ஸ் வந்து உயிரிழந்தார்.
News July 10, 2025
மகளிர் உரிமை திட்ட விதிகள் தளர்வு.. உதயநிதி தகவல்

மகளிர் உரிமைத் திட்ட விதிகளை CM ஸ்டாலின் தளர்த்தியிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் பேசிய அவர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம், கடந்த 22 மாதங்களாக
1.15 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், இந்த திட்டத்தில் இன்னும் புதிதாக விண்ணப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் உதயநிதி கூறினார்.
News July 10, 2025
தவெகவில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்..!

சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான காந்திமதிநாதன் தவெகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். புஸ்ஸி ஆனந்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தென் மாவட்டங்களில் மிகப்பெரிய சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மா.செ. பதவி வழங்காததால் அந்த சமூகத்தின் வாக்குகளை தவெகவால் பெற முடியாது என அதிருப்தி தெரிவித்துள்ளார். தனது அரசியல் பயணத்தை முடித்துக் கொள்வதாகவும் காந்திமதிநாதன் குறிப்பிட்டுள்ளார்.