News March 12, 2025
மும்மொழிக் கொள்கைக்கு அண்ணா ஆதரவு?

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை உயிரோடு இருந்திருந்தால் மும்மொழிக் கொள்கையை ஆதரித்திருப்பார் என்று டிடிவி தினகரன் பேசியுள்ளார். ஹிந்தியை தீவிரமாக எதிர்த்து ஆட்சியதிகாரம் பெற்ற அண்ணா குறித்து டிடிவி இவ்வாறு பேசியிருப்பது இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. திமுக, அதிமுக என இரு கட்சியினரும் டிடிவியை வசைபாடி வருகின்றனர். இவரது பேச்சு குறித்து உங்கள் கருத்து என்ன?
Similar News
News March 13, 2025
UPI சேவைகள் முடக்கம்: SBI விளக்கம்

நாடு முழுவதும் SBI வங்கியின் <<15739560>>UPI சேவைகள்<<>> முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து விளக்கமளித்த எஸ்பிஐ, UPI பரிவர்த்தனைகளில் தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொண்டுள்ளதால், வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை தோல்வியடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனை சரிசெய்ய முயற்சித்து வருவதாகவும், வாடிக்கையாளர்கள் UPI LITEஐ பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
News March 13, 2025
ODI WC-2027: ரோஹித்தின் முக்கிய முடிவு?

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முக்கிய முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. ODI WC-2027 வரை விளையாட முடிவு செய்துள்ள அவர், உடற்தகுதியில் கவனம் செலுத்த உள்ளார். இதற்காக இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும், அவரிடம் பேட்டிங் மற்றும் ஃபிட்னஸ் டிப்ஸ்களை பெறுவார் என்றும் கூறப்படுகிறது. அபிஷேக் IPLல், தினேஷ் கார்த்திக்கிற்கு வழிகாட்டியாக இருந்தார்.
News March 13, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 205 ▶குறள்: இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து. ▶பொருள்: யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.