News March 12, 2025
வீட்டிற்குள் பாம்பு நுழைந்தால் இதை செய்யுங்க..

பாம்புகள் கடுமையான வாசனைக்கு மிகவும் பயப்படும் என விலங்கியல் துறை நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, பாம்பு வீட்டிற்குள் நுழைந்தால் வினிகர் அல்லது மண்ணெண்ணெய் தெளிக்க அவர்கள் அறிவுறுத்துகின்றனர். கூடுதலாக பூண்டு, எலுமிச்சை, இலவங்கப்பட்டை, புதினா ஆகியவற்றை தூவினால் பாம்பு தானாகவே வெளியே ஓடிவிடும். அதேபோல், வெப்பநிலை மாற்றங்களுக்கும் அவை பயப்படும் என்பதால், புகையாலும் விரட்டலாம் என்கின்றனர்.
Similar News
News July 10, 2025
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாகனக் கடன்.. அரசு அறிவிப்பு

வாகனம் மற்றும் கணினி வாங்க கடன் பெற விரும்பும் ஆசிரியர்கள் உரிய விவரங்களை சமர்ப்பிக்கும்படி பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறையின் நிதிக்கட்டுப்பாட்டு அலுவலகம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளது. அதில், கடன் பெற விரும்புவோர் தற்போது அளிக்கப்பட்டுள்ள புதிய படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
News July 10, 2025
அகமதாபாத் விமான விபத்து.. இந்த வாரம் முதல் அறிக்கை

அகமதாபாத் விமானம் விபத்து குறித்த முதல்நிலை விசாரணை அறிக்கை இந்த வார இறுதியில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 260 பேர் பலியான இந்த விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்தக் குழுவின் இயக்குநர், போக்குவரத்து, சுற்றுலா விவகார நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜரானார். அப்போது அவர், விசாரணை சரியான பாதையில் செல்வதாகவும், முதல்நிலை அறிக்கை விரைவில் தாக்கலாகும் என்றார்.
News July 10, 2025
1,996 ஆசிரியர் பணியிடங்கள்… உடனே விண்ணப்பிங்க

அரசுப் பள்ளிகளில் 1,996 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் 216, ஆங்கிலம் 197, கணிதம் 232, இயற்பியல் 233, வேதியியல் 217 பணியிடங்கள் உள்பட 1996 இடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைனில் இன்று முதல் அடுத்த மாதம் 12-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.