News March 12, 2025
இன்று மாலையுடன் புத்தகத் திருவிழா நிறைவு

விழுப்புரத்தில் தற்போது நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழா இன்று(மார்ச்.12) மாலையுடன் நிறைவுபெற உள்ளது. கடந்த மார்ச்.02 ஆம் தேதி துவங்கப்பட்ட இக்கண்காட்சி 10 நாட்களாக மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று கடைசி நாள் என்பதால் மக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இன்று மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதுவரை ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 11, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து பணி விபரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 11, 2025
விழுப்புரம்: அண்ணன் தங்கைகள் சாதனை

விழுப்புரம் மாவட்டம், மண்டகப்பட்டை சேர்ந்தவர்கள் பரசுராமன்-தமிழ்செல்வி தம்பதியின் மூத்த மகன் சிவபாலன்,17; இவர் முட்டத்துார், பள்ளியில் +2 படிக்கிறார். இவரது தங்கை கனிஷ்கா,10;மற்றொரு தங்கை தீக்க்ஷா ,7; மூவரும் இந்தாண்டு நடந்த மாவட்ட, மாநில சிலம்பம் போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பிடித்து, சாதனை படைத்துள்ளனர். மூவரையும் கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.
News September 11, 2025
விழுப்புரம்: கனரா வங்கியில் பயிற்சியுடன் வேலை

விழுப்புரம் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <