News March 12, 2025
தோல்வியடைந்த மாடலை தமிழகத்தில் புகுத்த முயற்சி: PTR

மும்மொழிக் கொள்கையை அறிவுள்ளவர்கள் ஏற்கமாட்டார்கள் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காட்டமாகக் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை நல்ல பலனைக் கொடுத்துள்ளதாக கூறிய அவர், மும்மொழி என்ற தோல்வியடைந்த மாடலை புகுத்தி தமிழ்நாட்டின் கல்வித் தரத்தைக் குறைக்க சதி நடப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், 60 ஆண்டுகள் ஆனாலும் மும்மொழி கொள்கையை இங்கே அமல்படுத்த முடியாது என்றும் சவால் விடுத்துள்ளார்.
Similar News
News July 10, 2025
பிற்பகல் 12 மணி வரை… முக்கிய செய்திகள்

✪<<17015271>>கோவை <<>>குண்டுவெடிப்பு.. 28 ஆண்டுகள் கழித்து கைது
✪<<17013987>>அன்புமணி <<>>நீக்கம்.. தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்
✪<<17013085>>நமீபியா <<>>நாடாளுமன்றத்தில் PM மோடி… உற்சாக வரவேற்பு
✪<<17013477>>ஈரான் <<>>திட்டம்: அதிபர் டிரம்ப் உயிருக்கு ஆபத்து?
✪<<17013201>>வெற்றியை <<>>தொடருமா இந்தியா?.. இன்று 3-வது டெஸ்ட் ✪<<17013334>>மீண்டும் <<>>புஷ்பா காம்போ.. அட்லீ படத்தில் ரஷ்மிகா
News July 10, 2025
NR காங்கிரஸ் – பாஜக கூட்டணிக்கு என்னாச்சு?

புதுச்சேரியில் ஆளும் NR காங்கிரஸ் – பாஜக கூட்டணி இடையே மோதல் வலுத்து வருகிறது. <<17004404>>CM ரங்கசாமியை<<>> சமாதானம் செய்யும் முயற்சி பயனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, இருகட்சிகளின் முக்கியத் தலைவர்களும் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதால் கூட்டணி முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்தடுத்த திருப்பங்களால் இருகட்சி தொண்டர்களும் கலக்கத்தில் உள்ளனர்.
News July 10, 2025
500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் intel

intel நிறுவனம் USA-ல் உள்ள ஓரிகன் அலுவலகத்தில் இருந்து 529 ஊழியர்களை நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிர்வாகச் செலவை குறைக்கும் நோக்கிலும், Chip துறையை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பணிநீக்க நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக, AI-ன் மூலம் HR வேலைகளை நிவர்த்தி செய்வதன் பொருட்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பணிநீக்கத்தை கையிலெடுத்திருந்தது.