News March 12, 2025

நடிகை செளந்தர்யா மரணம் விபத்தல்ல: பரபரப்பு புகார்

image

பிரபல நடிகை சௌந்தர்யா 2004இல் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், 21 ஆண்டுகளுக்குப்பின், செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல, அது கொலை என்று ஆந்திராவை சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். நிலப் பிரச்னையில் இக்கொலை நடந்திருக்கலாம் என்றும், இக்கொலைக்கும் நடிகர் மோகன் பாபுவுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அரசு அதிகாரிகளிடம் அவர் புகாரளித்துள்ளார்.

Similar News

News March 12, 2025

விஜய்யை இழிவாக சித்தரித்து கார்ட்டூன்… குவியும் கண்டனம்…

image

தவெக தலைவர் விஜய்யை தினமலர் பத்திரிகை இழிவாக சித்திரித்திருப்பதாக அக்கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். விஜய்யை ஆடு போல சித்திரித்திருக்கும் தினமலர், ஆதவ் அர்ஜுனா இரட்டை இலையை புகட்டுவது போல கார்ட்டூன் வெளியிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் தவெக செய்தித் தொடர்பாளர் லயோலா மணி, தினமலர் வரம்பு மீறி செல்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

News March 12, 2025

மரடோனா மரண வழக்கு: விசாரணை தொடங்கியது

image

கால்பந்து விளையாட்டு ஜாம்பவனான அர்ஜென்டினாவின் மரடோனா (60) 2020இல் மாரடைப்பால் காலமானார். அதற்கு முன்பு ரத்த உறைதல் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீட்டுக்கு திரும்பியிருந்தார். இதனால் மருத்துவ குழுவின் கவனக்குறைவே மரணத்திற்கு காரணமென குற்றஞ்சாட்டி 8 பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. 8 பேர் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படக்கூடும்.

News March 12, 2025

₹87 லட்சம் கோடி காலி

image

கடும் சரிவை சந்தித்துவரும் இந்திய பங்குச்சந்தைகள், சுமார் $1 ட்ரில்லியன் சந்தை மதிப்பை இழந்திருப்பதாக அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்திய ரூபாயின் மதிப்பில் ₹87 லட்சம் கோடி. கடந்த டிசம்பர் மாதம் உச்சம் தொட்ட நிஃப்டி, அதிலிருந்து 16% மதிப்பினை இழந்திருக்கிறது. சிறிய நிறுவனங்கள் பெரும் சரிவை கண்டிருக்கின்றன. இதனால், முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

error: Content is protected !!