News March 12, 2025
தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகன் விஷம் குடித்து தற்கொலை

தேனி நகர் பாரஸ்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன்(47) இவர் ஆட்டோ ஓட்டுநர். சமீபத்தில் இவரது தாய் முத்தம்மாள் இறந்தார். இதனால் தானும் சாகப்போகிறேன் எனக் கூறியபடி இருந்தவர் மார்ச்.6ம் தேதி மாலை தேனி பழைய பஸ்நிலையத்தில் விஷ மருந்து குடித்து மயக்க நிலையில் கிடந்தார். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை தமிழரசன் உயிரிழந்தார்
Similar News
News November 13, 2025
தேனி: 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியை சேர்ந்த பிளஸ்.2 பள்ளி மாணவி மகேஸ்வரி (17). இவர் நேற்று முன்தினம் பள்ளியில் வகுப்பு முடித்து தனது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள தனது அறைக்கு சென்ற மாணவி யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆண்டிபட்டி போலீசார் மாணவியின் உடலை மீட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 13, 2025
தேனி: டிகிரி முடித்தால் பரோடா வங்கியில் வேலை

தேனி மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் தமிழகத்தில் காலியாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 1க்குள் இங்கு <
News November 13, 2025
தேனியில் பயங்கரம் ஜீப் மீது பஸ் மோதி 14 பேர் படுகாயம்

கம்பம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த 16 பெண் தொழிலாளர்கள் நேற்று (நவ.12) குமுளி அருகே 8.ம் மைலில் உள்ள ஏலத்தோட்டத்திற்கு ஜீப்பில் சென்றனர். 8.ம் மைல் அருகே சென்ற போது ஜீப் மீது எதிரே வந்த தனியார் பஸ் மோதியது. இதில் மலர்கொடி, ராதா, சிட்டம்மாள், பிரியா, ரெஜினாதேவி, சவுந்தர்யா, ரோகினி, பாலம்மாள், மலர்கொடி, சுவேதா, வளர்மதி, அமுதா உட்பட 14 பெண் தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர்.


