News March 11, 2025
NO.1 தமிழ்நாடு தான்: ₹1 லட்சம் கோடி கடன்

2023-24 நிதியாண்டில் தமிழ்நாடு ₹1.13 லட்சம் கோடியை திறந்தவெளி சந்தையில் கடன் வாங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல், 2024-25 நிதியாண்டில் ₹1.01 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாகவும், நாட்டிலேயே தமிழ்நாடு தான் அதிகம் கடன் வாங்கிய மாநிலமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பட்டியலில் திரிபுரா மாநிலம் மட்டும் ஒரு பைசா கூட கடன் வாங்கவில்லை.
Similar News
News March 12, 2025
செந்தில் பாலாஜிக்கு வலைவீசும் பாஜக?

டாஸ்மாக் தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் ED மீண்டும் சோதனை நடத்தியிருப்பது, தமிழகத்தில் பாஜகவின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது. செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி அளித்து பாஜகவில் சேர்க்கும் முயற்சி இது என்றும், அப்படி பாஜகவில் அவர் சேர்ந்தால் மாநிலத் தலைவர் பதவி அளித்து, கொங்கு மண்டலத் தொகுதிகளை அவர் மூலம் 2026 தேர்தலில் வெல்வதே பாஜகவின் திட்டம் என்றும் கூறப்படுகிறது.
News March 12, 2025
2027 உலகக் கோப்பையே ரோஹித்தின் இலக்கு: பாண்டிங்

2027ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாட ரோஹித் ஷர்மா விரும்புவதாக ஆஸி., அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். 2023இல் உலகக் கோப்பையில் IND தோல்வி அடைந்ததால், 2027இல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஏக்கம் அவருக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். T20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ODI உலகக் கோப்பையை தனது தலைமையில் வெல்ல வேண்டும் என்ற விருப்பம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 12, 2025
நேபாளத்தில் ட்ரெண்டாகும் யோகி ஆதித்யநாத்!

நேபாள் முன்னாள் அரசர் ஞானேந்திர ஷாவை வரவேற்க, முடியாட்சி ஆதரவு இயக்கம் (RPP), அந்நாட்டு தலைநகர் காத்மண்டுவில் பேரணி நடத்தியது. அதில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது பேசுபொருளாகியுள்ளது. 2025 ஜனவரியில் முன்னாள் அரசர் ஷா, உ.பி வந்த போது யோகியை சந்தித்தார். ஆனால், RPPக்கு கெட்ட பெயரை உண்டாக்க ஆளும் அரசால் செய்யப்பட்ட சதி இது என RPP குற்றஞ்சாட்டியுள்ளது.