News March 11, 2025

இந்தியாவில் முதலில் ஆதார் கார்டு பெற்றது யார் தெரியுமா?

image

நாட்டில் முதல் ஆதார் கார்டு யாருக்கு வழங்கப்பட்டது என யோசித்தது உண்டா? நாட்டின் முதல் ஆதார் கார்டு 2010ல் செப்டம்பர் 29 ஆம் தேதி அன்று ரஞ்சனா சோனாவனே என்பவருக்கு வழங்கப்பட்டது. இவர் மகாராஷ்டிராவின் நந்துபார் மாவட்டத்தில் உள்ள தம்பாலி என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். சோனியா காந்தி மற்றும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் அவருக்கு முதல் ஆதார் கார்டு வழங்கப்பட்டது. SHARE IT.

Similar News

News July 9, 2025

மாலை 6 மணி வரையிலான தலைப்புச் செய்திகள்

image

<<17005460>>✪கடலூர் விபத்துக்கு<<>> கேட் கீப்பர் தூங்கியதே காரணம்

✪<<17007676>>குஜராத்தின் வதோதராவில் <<>> பாலம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலி

✪<<17005030>>யோகா செய்து PM<<>> மோடிக்கு வரவேற்பளித்த நமீபியா

✪<<17004947>>4G, 5G ஸ்மார்ட்<<>> போன்களின் விலைகளை நிறுவனங்கள் குறைக்க உள்ளதாக தகவல்

✪<<17007716>>3-வது டெஸ்டில்<<>> களமிறங்கும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர்

News July 9, 2025

மகாராஷ்டிராவை போன்று பிஹாரிலும் பாஜக சதி: ராகுல்

image

ECI உதவியோடு மகாராஷ்டிராவை போன்று பிஹார் தேர்தலிலும் முறைகேடு செய்ய பாஜக சதி செய்வதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அம்மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை ECI மேற்கொண்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அவர், ஏழை வாக்காளர்களை Voter List-ல் இருந்து நீக்க வாய்ப்புள்ளது என்றார்.

News July 9, 2025

₹10 யாசகம் போட்ட பெண்.. ரஜினிகாந்த் பேச்சு வைரல்

image

தனக்கு பெண் ஒருவர் ₹10 யாசகம் போட்டதாக ரஜினி பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது. பெங்களூருவில் உள்ள கோயிலுக்கு தாம் மாறு வேடத்தில் சென்று இருந்ததாகவும், அப்போது அங்கு வந்த பெண் தன் உருவத்தை பார்த்து பிச்சை எடுப்பவர் என கருதி ₹10 அளித்ததாகவும், அதை மறுக்காமல் தாம் வாங்கிக் கொண்டதாகவும், பிறகு உண்டியலில் தாம் ₹200 போட்டதை பார்த்து அவர் தன்னிடம் வருத்தம் தெரிவித்தாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!