News March 31, 2024

தேனி அருகே கொடூர கொலை

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (மார்.29) நந்தினி வீட்டுக்கு சதீஸ்குமார் சென்ற போது பிரபாகரன் என்பவருடன் நந்தினி இருந்துள்ளார். இதுகுறித்து வாக்குவாதம் ஏற்படவே இருவரும் சதீஷ்குமாரை குத்தியதில் அவர் உயிரிழந்தார். கொலை செய்த இருவரையும் போலீசார் நேற்று (மார்30) கைது செய்தனர்.

Similar News

News April 18, 2025

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

image

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய(ஏப்.18) நீர்மட்டம்: வைகை அணை: 56.27 (71) அடி, வரத்து: 52 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 105 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 34.50 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 98.07 (126.28) அடி, வரத்து: 5.62 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 39 (52.55) அடி, வரத்து: 3 க.அடி, திறப்பு: இல்லை.

News April 18, 2025

தேனி மாவட்ட உதவி எண்கள் அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04546 –254956
▶️காவல் -100
▶️விபத்து -108
▶️தீ தடுப்பு – 101
▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098
▶️மின்தடை உதவி எண் – 1912
▶️பேரிடர் கால உதவிக்கு – 1077
உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்தவும். ஆபத்தில் உள்ளவர்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும்.

News April 18, 2025

நடந்து சென்ற தொழிலாளி மீது கார் மோதி பலி

image

போடி அருகே ராசிங்காபுரம் அழகர் கோயில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் 42. கூலித் தொழிலாளி இவரும் அதே பகுதியை சேர்ந்த கதிரேசன் என்பவரும் தேவாரம் செல்லும் மெயின் ரோட்டில் நேற்று நடந்து சென்றுள்ளனர். பின் பக்கமாக அதிவேகமாக கார் முன்னாள் சென்ற இளங்கோவன், கதிரேசன் மீதும் மோதியதில் சிகிச்சை பலனின்றி இளங்கோவன் இறந்தார். உரிய நிவாரணம் வழங்க கோரி ராசிங்காபுரம் ரோட்டில் உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!