News March 11, 2025

மாடிப்படிக்கட்டில் இருந்து விழுந்த குழந்தை உயிரிழப்பு

image

தாம்பரம் அருகே மணிமங்கலம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் பாலகுமாரன் – வித்தியா தம்பதியர். நேற்று மாலை வித்தியா துணிகளை துவைத்து காய வைப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது அவருடன் இருந்த அவரின் இரண்டு வயது பெண் குழந்தை ஆருத்ரா தவறி கீழே விழுந்து உயிரிழந்தது. மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 29, 2025

செங்கல்பட்டில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல் மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சினேகா அறிவித்துள்ளார். அன்றைய தினம் திறந்திருக்கும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

News September 29, 2025

மாவட்ட போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, செங்கல்பட்டு வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பொதுமக்கள், படாளம்-புக்கத்துறை பகுதிகளில் மேம்பாலப் பணி நடப்பதால், அவ்வழியைத் தவிர்க்க வேண்டும். இது தொடர்பாகக் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாகன நெரிசலைத் தவிர்க்க, பயணிகள் மாற்று வழியில் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News September 29, 2025

செங்கல்பட்டு: கண் நோயை குணமாகும் சீனிவாச பெருமாள்

image

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள செம்மஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது 1500 ஆண்டுகள் பழமையான செம்மஞ்சேரி சீனிவாச பெருமாள் கோயில். இங்குள்ள சீனிவாச பெருமாளை வணங்குவதன் மூலம் கண் தொடர்பான பிரச்சினைகள் குணமடைவதாக நம்பப்படுகிறது. ஒரு பல்லவ மன்னன் தனது இழந்த பார்வையை இங்கு வழிபட்டு மீண்டும் பெற்றதாகத் தல புராணம் கூறுகிறது. இன்றும் பலர் கண் சம்பந்தமான கோளாறுகளுக்கு இங்கு வந்து வழிபடுகிறார்கள். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!