News March 11, 2025

சேலம்: இதை செய்யலனா ரேஷன் அட்டை கேன்சல் ஆகிடும்

image

கலெக்டர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலத்தில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் eKYC பதிவினை மேற்கொள்ளாமல் உள்ளார்கள். அவர்களுக்கு தங்கள் e-KYCயை முடிப்பதற்கான கடைசி தேதி மார்ச்.25 ஆகும். இந்த செயல்முறை ஆன்லைனிலோ அல்லது ரேஷன் கடைகளிலோ மேற்கொள்ளலாம். இதற்கு ஆதார் அட்டை, மொபைல் எண் கட்டாயம் தேவை”. இதை ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

Similar News

News March 12, 2025

பெங்களூரூ கிழக்கு ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நிற்காது

image

பெங்களூர் கிழக்கு ரெயில் நிலையத்தில் கூடுதல் பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால்,சேலம் கோட்டம் வழியாக செல்லும் ரயில்கள் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் துறைமுகம்-மைசூர் எக்ஸ்பிரஸ் (16231), தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் (16235), கன்னியாகுமரி- கேஎஸ்ஆர் பெங்களூர் எக்ஸ்பிரஸ், ஆகிய ரெயில்கள் நாளை முதல் மறு தேதி அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது.

News March 12, 2025

ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் – போலீசார் அறிவிப்பு

image

சேலம் சொர்ணபுரியில் ‘ரீ கிரியேட் பியுச்சர் இந்தியா’ என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி பணம் இரட்டிப்பாக தருவதாக பொதுமக்களிடம்கோடிக்கணக்கில் வசூல் செய்து மோசடி செய்த வழக்கில், இந்த நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகாரைக் கொடுக்குமாறு பள்ளப்பட்டி காவல்துறையினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதே போல் ஏமாறாமல் இருக்க மற்றவர்களுக்கும் இதை ஷேர் செய்யுங்கள்.

News March 12, 2025

சேலம் மார்ச்.12 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.12) நடைபெறும் முக்கிய நிகழ்வுகள். ▶️காலை 10 மணி அயோத்தியா பட்டணம் ஊராட்சி அலுவலகம் திறப்பு ▶️பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம் (கோட்டை மைதானம்) ▶️ காலை 11 மணி ஓமலூரில் மக்கள் சந்திப்பு திட்ட முகம் ஆட்சியர் ▶️ மாலை 4 மணி விடுதி மாணவ மாணவர்களுக்கு கிச்சன் திட்டத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் (கோட்டை மைதானம்).

error: Content is protected !!