News March 11, 2025

இன்றைய பொன்மொழிகள்!

image

*பணம் இருந்தால் தான், நாலு பேர் நம்மை மதிப்பார்கள் என்றால், அந்த மானங்கெட்ட மதிப்பு தேவையே இல்லை. *பிறர் உழைப்பை தன் சுயநலத்திற்காக பயன்படுத்துவதே, உலகின் மிகவும் கேவலமான செயலாகும். *வறுமையும் அறியாமையும் போகாமல் நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது. *பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும், தேசமே முன்னேறும் – காமராஜர்.

Similar News

News March 11, 2025

NEP விவகாரம்: பிரதானுக்கு அன்பில் மகேஷ் பதிலடி

image

தேசிய கல்விக் கொள்கையை(NEP) முதலில் ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு பின்னர் யூ-டர்ன் அடித்ததாக பார்லிமென்டில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், தவறான தகவலைப் பரப்புவது உண்மையை மாற்றிவிடாது எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கல்விக் கொள்கையை குறைத்து மதிப்பிடும் தேசிய கல்விக் கொள்கையை தொடர்ந்து எதிர்ப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 11, 2025

குழந்தைகளின் பசி போக்க ஒரு தாயின் போராட்டம்

image

குழந்தைகளை காக்க ஒரு தாய் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதற்கு சிறந்த உதாரணமாக, லண்டனைச் சேர்ந்த மேரியை சொல்லலாம். இவருக்கு 4 குழந்தைகள். 1914ல் கணவர் இறந்துவிட, குழந்தைகளை கவனிப்பது மேரிக்கு சவாலாக இருந்தது. இந்த நேரத்தில் அவர் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். அப்போது, உலகின் அசிங்கமான பெண்ணுக்கான போட்டி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கிடைத்த பணத்தை வைத்து, குழந்தைகளின் பசியை போக்கினார்.

News March 11, 2025

நாடாளுமன்ற அமர்வுகள் 13ஆம் தேதி ரத்து

image

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் வருகிற 14ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் அடிப்படையில் அன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 13ஆம் தேதியும் 2 அவைகளிலும் அமர்வுகளையும் ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக மக்களவை வருகிற 29ஆம் தேதி செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!