News March 11, 2025

மேலும் 3 நாடுகள் மீது ரஷ்யா பாோ் தொடுக்கும்?

image

உக்ரைனுக்குப் பிறகு, மால்டோவா, ஜார்ஜியா, ரூமேனியா நாடுகள் மீது ரஷ்யா போர் தொடுக்கும் என்று நேட்டோ EX கமாண்டர் ரிச்சார்ட் செரிப் எச்சரித்துள்ளார். உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப் முடிவு அமலுக்கு வருவது பெரும் அபாயம் என்றும், இது ரஷ்ய அதிபர் புதினின் போர் திட்டத்திற்கு சாதகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். பால்டிக் நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் தொடுக்கவும் இது வழிக்கும் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News March 11, 2025

இந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்டும்

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்யும் என IMD முன்னறிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும். இதனால், பள்ளி, கல்லூரி செல்வோர் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோட் எடுத்துச்செல்லவும்.

News March 11, 2025

டிஜிட்டல் பரிவர்த்தனை செய்கிறீர்களா? உஷார்!

image

நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதற்கேற்ப, சைபர் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அந்த வகையில், நடப்பு நிதியாண்டின் 9 மாதங்களில் சைபர் குற்றங்களால் ₹40 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 13,384 சைபர் குற்றங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் இதனால், ₹733 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

News March 11, 2025

இன்று மொரீஷியஸ் செல்கிறார் PM மோடி

image

2 நாள் பயணமாக PM மோடி இன்று மொரீஷியஸ் செல்கிறார். அந்நாட்டின் 57வது தேசிய தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க உள்ளார். இதுகுறித்து அவரது X பதிவில், எனது நண்பரும், பிரதமருமான டாக்டர் நவீன்சந்திர ராம்கூலமை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும், அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் உரையாட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது பயணம் இருநாட்டு உறவுகளில் பிரகாசமான அத்தியாயத்தை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!