News March 11, 2025
டெல்லி மக்களை மோடி ஏமாற்றி விட்டார்.. ஆம் ஆத்மி தாக்கு

டெல்லி மக்களை பிரதமர் மோடி ஏமாற்றி விட்டதாக ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி மூத்தத் தலைவருமான அதிஷி, தேர்தலின்போது பாஜக வென்றால் பெண்களின் வங்கிக் கணக்கில் மார்ச் 8ஆம் தேதி ரூ.2,500 உதவித் தொகை வரவு வைக்கப்படுமென மோடி கூறினார். ஆனால் அதற்கு மாறாக இன்று வரை பதிவு கூட தொடங்கப்படவில்லை என்றும் சாடினார்.
Similar News
News March 11, 2025
சனி தோஷத்தை விரட்டும் சனி காயத்ரி மந்திரம்!!

ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனிப் ப்ரசோதயாத்
பொருள்:
ஓம், கொடியில் காக்கை வைத்திருப்பவரை நினைத்துப் பார்க்கட்டும், ஓ, உள்ளங்கையில் வாளை ஏந்தியவரே, சனீஸ்வரர் என் எண்ணங்களை ஒளிரச் செய்யுங்கள்.
News March 11, 2025
நீரழிவு நோய்க்கான மாத்திரை விலை 90% குறைகிறது

நீரழிவு நோய் என்று அழைக்கப்படும் சர்க்கரை வியாதிக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மாத்திரையின் விலை 90% குறைக்கிறது. அதாவது ₹60க்கு விற்கப்படும் ஒரு மாத்திரையின் விலை வெறும் ₹6ஆக குறைகிறது. கோடிக்கணக்கான மக்களின் செலவை குறைத்து நிதி அழுத்தத்திலிருந்து விடுபட உதவும் என்பதுடன் நீரிழிவு நோய் பாதித்த அனைவரும் அதனை வாங்கி பயன்படுத்த ஏதுவாக அமையும்.
News March 11, 2025
இந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்டும்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்யும் என IMD முன்னறிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும். இதனால், பள்ளி, கல்லூரி செல்வோர் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோட் எடுத்துச்செல்லவும்.