News March 11, 2025
கே.எல்.ராகுல் vs அக்சர்: DC கேப்டன் யார்?

IPL விரைவில் துவங்க உள்ள நிலையில், DC கேப்டனை வரும் நாள்களில் அந்த அணி அறிவிக்க உள்ளது. இந்த ரேஸில் அக்சர் படேலும், கே.எல்.ராகுலும் உள்ளனர். இதில், DCக்காக 7 சீசன்கள் விளையாடியுள்ள ஆல்ரவுண்டர் அக்சரின் கையே ஓங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் கேப்டன்சியில் அனுபவம் இல்லாத காரணத்தால் LSG, பஞ்சாப் அணியை வழிநடத்திய அனுபவம் கொண்ட, முதல்முறையாக DCக்காக விளையாட உள்ள ராகுலின் பெயரும் அடிபடுகிறது.
Similar News
News March 11, 2025
JEE மெயின் தேர்வு தேதிகள் அறிவிப்பு

JEE மெயின் தேர்வுகள் ஏப்.2ஆம் தேதி முதல் தொடங்கும் என NTA அறிவித்துள்ளது. முதல் தாள் தேர்வுகள் ஏப்.2, 3, 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் காலை, மாலை என 2 கட்டங்களாக நடத்தப்படும். 8ம் தேதி பிற்பகல் மட்டுமே நடத்தப்படும். BARC இடங்களுக்கான தாள்-2A மற்றும் B-பிளானிங் இடங்களுக்கான தாள்-2B ஏப் .9 ஆம் தேதி காலை ஒரே கட்டமாக நடத்தப்படும். முதல் தாள் தேர்வு முடிவுகள் ஏப்.17ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும்.
News March 11, 2025
புதிய உச்சத்தில் கோதுமை உற்பத்தி

நடப்பாண்டில், இந்தியாவின் கோதுமை உற்பத்தி புதிய உச்சமாக 11.54 கோடி டன்னாக இருக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது அரசின் இலக்கான 11.50 கோடி டன்னை விட அதிகமாகும். 2024-25ஆம் ஆண்டில் காரீப், ராபி பருவ மொத்த உணவு தானியங்கள் உற்பத்தி 5% அதிகரித்து, 33.09 கோடி டன்னாக இருக்கும். இதில் காரிப் பயிர்கள் 16.64 கோடி டன்னாகவும், ராபி பயிர்கள் 16.45 கோடி டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
News March 11, 2025
இன்றைய பொன்மொழிகள்!

*பணம் இருந்தால் தான், நாலு பேர் நம்மை மதிப்பார்கள் என்றால், அந்த மானங்கெட்ட மதிப்பு தேவையே இல்லை. *பிறர் உழைப்பை தன் சுயநலத்திற்காக பயன்படுத்துவதே, உலகின் மிகவும் கேவலமான செயலாகும். *வறுமையும் அறியாமையும் போகாமல் நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது. *பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும், தேசமே முன்னேறும் – காமராஜர்.