News March 10, 2025
ரூ.1.93 லட்சம் கோடிக்கு நகை அடகு வைத்துள்ள TN பெண்கள்

தங்கம் மீது ஆசையில்லாத பெண்கள் இல்லை எனலாம். அதே தங்கம்தான் சில குடும்பங்களின் அவசர தேவைக்கும் உதவுகிறது. 2024 டிசம்பரில் எடுக்கப்பட்ட ஆய்வில் தமிழகப் பெண்கள் ரூ.1,93,249 கோடிக்கு நகை அடகு வைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், நாட்டிலேயே தமிழகப் பெண்கள்தான் நகை அடகு வைப்பதில் முதலாவதாக இருப்பதும், 2020 டிசம்பரில் இது ரூ.62,578 கோடியாக இருந்து பிறகு 3 மடங்கு அதிகரித்ததும் தெரிய வந்துள்ளது.
Similar News
News March 11, 2025
தனியார் பள்ளிகளில் மும்மொழி இல்லையா? தமிழிசை கேள்வி

அரசுப் பள்ளி குழந்தைகளை வஞ்சித்து, தமிழக அரசு அரசியலை முன்னெடுத்துச் செல்வதாக தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். தனியார் பள்ளி பிள்ளைகளுக்கு கிடைக்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளி பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை என்ற உண்மையை உங்களால் மறுக்க முடியுமா? என CM ஸ்டாலினுக்கு அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தனியார் பள்ளிகளில் மும்மொழி கற்பிக்கப்படவில்லை என்று கூற முடியுமா? எனவும் அவர் வினவினார்.
News March 11, 2025
இந்த கார் தயாரிப்பை நிறுத்தும் மாருதி சுசூகி?

மாருதி சுசூகி தனது செடான் மாடலான CIAZ கார் தயாரிப்பை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2014ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காரின் விற்பனை சரிந்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 7,726 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. மறுபுறம், ஹோண்டா சிட்டி, விர்டஸ், வெர்னா போன்ற போட்டியாளர்களிடமிருந்து அதிகரித்து வரும் போட்டி காரணமாக, CIAZ-ன் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்ததாகத் தெரிகிறது.
News March 11, 2025
லிடியன் நாதஸ்வரம் விவகாரம்: இளையராஜா விளக்கம்!

லிடியன் நாதஸ்வரத்தை சிம்பொனி எழுத சொன்னதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா விளக்கமளித்துள்ளார். அதில், லிடியன் தன்னிடம் சிம்பொனி கம்போஸ் பண்ணதாக ஒரு டியூனை போட்டு காண்பித்ததாகவும், அது சிம்பொனி இல்லை, சினிமா பாடல் போல் உள்ளதாகத் தான் கூறியதாகவும் தெரிவித்தார். மேலும், சிம்பொனி என்றால் என்னவென்று தெரிந்துவிட்டு, கம்போஸ் செய்யுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.