News March 10, 2025
இளம் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருத்திகா 22. திருமணமாகி கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தனது குழந்தையுடன் கரூர் மாவட்டம் குள்ளப்பட்டியில் உள்ள தனது அண்ணன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத போது அருகில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். க.பரமத்தி போலீசார் உடலை கைப்பற்றி இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 19, 2025
ஜாக்கிரதை ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

கரூர் மக்களே, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
News April 19, 2025
கரூர் மின்சாரத் துறை எண்கள் !

▶️உதவி செயற்பொறியாளர் வடக்கு/கரூர்: 9445854074
▶️உதவி செயற்பொறியாளர்/ நகர்ப்புறம்/கரூர்: 04324-240988
▶️உதவி செயற்பொறியாளர் /வெள்ளியணை: 04324-281224
▶️உதவி செயற்பொறியாளர்/ அய்யர்மலை: 04323-245397
▶️உதவி செயற்பொறியாளர்/ குளித்தலை: 04323-222075
▶️உதவி செயற்பொறியாளர்/ சிந்தாமணிப்பட்டி: 04323-251246
▶️உதவி செயற்பொறியாளர்/ புகளூர்: 04324-277288
உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 19, 2025
கரூர்: வீடு புகுந்து செயின் திருடியவர்கள் கைது !

கரூர்: வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி(60) இவர் கடந்த, ஏப்.15ஆம் தேதி குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். மீண்டும் வீட்டுக்கு வந்த போது வீட்டில் இருந்த 6 அரை பவுன் செயின் திருடபட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கொடுமுடியைச் சேர்ந்த கணேசன், துரை ராஜ் ஆகிய இருவரையும் நேற்று(ஏப்.14) கைது செய்தனர்.