News March 10, 2025
ஆணவக் கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

தெலங்கானாவில் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த பிரனாய் பெருமுல்லா (24) என்ற தலித் இளைஞர், கடந்த 2018இல் வெட்டிக் கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இவ்வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அப்பெண்ணின் தந்தை மாருதி ராவ் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், பிரணாயை கொலை செய்த கூலிப்படை தலைவன் சுபாஷ் சர்மாவுக்கு மரண தண்டனை விதித்து நல்கொண்டா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
Similar News
News March 11, 2025
₹100க்கு ரீசார்ஜ் செய்தால் 90 நாட்களுக்கு ‘JIO HOTSTAR’!

வாடிக்கையாளர்களுக்கு ₹100க்கு புதிய ரிசார்ஜ் பிளானை JIO அறிமுகம் செய்துள்ளது. JIO சினிமா, டிஸ்னி HOTSTAR நிறுவனங்கள், ‘JIO HOTSTAR’ என்ற பெயரில் அண்மையில் ஒரே நிறுவனமாக இணைந்தன. இந்நிலையில், ஜியோவின் ₹100 புதிய பேக்கில், 90 நாட்களுக்கு ‘JIO HOTSTAR’ சந்தாவுடன், 5 GB டேட்டாவும் வழங்கப்படுகிறது. வரும் 22ம் தேதி தொடங்கும் IPL-ஐ கருத்தில் கொண்டு, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்- பட்டதாகக் கூறப்படுகிறது.
News March 11, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News March 11, 2025
மேலும் 3 நாடுகள் மீது ரஷ்யா பாோ் தொடுக்கும்?

உக்ரைனுக்குப் பிறகு, மால்டோவா, ஜார்ஜியா, ரூமேனியா நாடுகள் மீது ரஷ்யா போர் தொடுக்கும் என்று நேட்டோ EX கமாண்டர் ரிச்சார்ட் செரிப் எச்சரித்துள்ளார். உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப் முடிவு அமலுக்கு வருவது பெரும் அபாயம் என்றும், இது ரஷ்ய அதிபர் புதினின் போர் திட்டத்திற்கு சாதகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். பால்டிக் நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் தொடுக்கவும் இது வழிக்கும் எனவும் கூறியுள்ளார்.