News March 10, 2025
ஆணவக் கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

தெலங்கானாவில் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த பிரனாய் பெருமுல்லா (24) என்ற தலித் இளைஞர், கடந்த 2018இல் வெட்டிக் கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இவ்வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அப்பெண்ணின் தந்தை மாருதி ராவ் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், பிரணாயை கொலை செய்த கூலிப்படை தலைவன் சுபாஷ் சர்மாவுக்கு மரண தண்டனை விதித்து நல்கொண்டா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
Similar News
News July 9, 2025
பாஜகவை விட அதிமுகவே துரோகம் செய்கிறது: கனிமொழி

2024 தேர்தலில் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு, தற்போது பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளது அதிமுக என கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர், பாஜகவை விட அதிமுகவே தமிழகத்திற்கு துரோகம் செய்வதாகவும் சாடினார். மேலும், மத்திய அரசு என்ன செய்கிறது, மாநில அரசு என்ன செய்கிறது என்றுகூட தெரியாமல் நாங்கள் அரசியல் செய்கிறோம் என்று சிலர் வாக்கு கேட்டு வருவதாக விஜய்யை மறைமுகமாக தாக்கிப் பேசினார்.
News July 9, 2025
கட்டுமான நலவாரியத்தின் கல்வி உதவித்தொகை உயர்வு!

கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. செவிலியர், கேட்டரிங், உணவு தயாரித்தல், சேவை உள்ளிட்ட பட்டயப் படிப்புகளுக்கு(Diploma) ஆண்டுக்கு ₹3,000 வழங்கப்படும். கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகள் முனைவர் பட்டப்படிப்புக்கு ஆண்டுக்கு ₹15,000 வீதம் 3 ஆண்டுக்கு வழங்கப்படவுள்ளன. இதனால், பல லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்கள் பயனடையும்.
News July 9, 2025
சிறுவர்களுக்கான பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் PAN கார்டு கட்டாயமாகும். குழந்தைகளின் பெயரில் முதலீடுகள் உள்ளிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு இது பயன்படுகிறது. இதற்கு NSDL வெப்சைட்டில் அப்ளை செய்யும்போது Form 49A-ஐத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்க வேண்டும். உங்களுக்கு பான் கார்டு வரும்போது புகைப்படம், கையெழுத்து இல்லாமலே வரும். எனவே, 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் மீண்டும் விண்ணப்பித்து போட்டோ உடன் கார்டைப் பெறலாம்.