News March 10, 2025
ஏசி விலை ₹2,000 உயர்வு

வெயில் இப்போதே வெளுத்து வாங்குவதால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், ஏசியை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், ஏசி விலையை யூனிட் ஒன்றுக்கு ₹2,000 வரை உயர்த்தப்படுவதாக ஏசி தயாரிப்பு நிறுவனங்கள் கூறியுள்ளன. புளூஸ்டார் நிறுவனம் 3% அளவுக்கு விலையை உயர்த்தியுள்ளது. அதனைத்தொடர்ந்து, ஹயர் நிறுவனமும் தனது ஏசியின் விலை 4 – 5% வரை உயர்த்த உள்ளது.
Similar News
News March 11, 2025
இலவச பஸ் பயணம்.. தெலுங்கானா வேற லெவல்

தமிழகத்தைப் போல், தெலுங்கானாவிலும் பெண்கள் இலவசமாக அரசு பஸ்களில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதில் தமிழகத்திற்கும், தெலுங்கானாவிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. தமிழகத்தில் எந்த மாநில பெண் என்றாலும் இலவசமாக பயணிக்கலாம். ஆனால் தெலுங்கானாவில் அந்த மாநில பெண்கள் மட்டுமே பயணிக்க முடியும். ஆதாரை நடத்துநர் பார்த்து உறுதிசெய்த பிறகே பஸ்சில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
News March 11, 2025
ஒடிசா: 10 ஆண்டுகளில் 118 மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர்

ஒடிசாவில் கடந்த 10 ஆண்டுகளில் 118 மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு இருப்பதாக CM மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது தொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து 315 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், 238 பேர் சரண் அடைந்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 11, 2025
கே.எல்.ராகுல் vs அக்சர்: DC கேப்டன் யார்?

IPL விரைவில் துவங்க உள்ள நிலையில், DC கேப்டனை வரும் நாள்களில் அந்த அணி அறிவிக்க உள்ளது. இந்த ரேஸில் அக்சர் படேலும், கே.எல்.ராகுலும் உள்ளனர். இதில், DCக்காக 7 சீசன்கள் விளையாடியுள்ள ஆல்ரவுண்டர் அக்சரின் கையே ஓங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் கேப்டன்சியில் அனுபவம் இல்லாத காரணத்தால் LSG, பஞ்சாப் அணியை வழிநடத்திய அனுபவம் கொண்ட, முதல்முறையாக DCக்காக விளையாட உள்ள ராகுலின் பெயரும் அடிபடுகிறது.