News March 10, 2025
4 மாவட்டங்களுக்கு மிக கனமழை அலர்ட்

தமிழகத்தில் வரும் 11ஆம் தேதி நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக RMC கணித்துள்ளது. மேலும், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். வரும் 12ஆம் தேதி குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Similar News
News March 10, 2025
ரூ.1.93 லட்சம் கோடிக்கு நகை அடகு வைத்துள்ள TN பெண்கள்

தங்கம் மீது ஆசையில்லாத பெண்கள் இல்லை எனலாம். அதே தங்கம்தான் சில குடும்பங்களின் அவசர தேவைக்கும் உதவுகிறது. 2024 டிசம்பரில் எடுக்கப்பட்ட ஆய்வில் தமிழகப் பெண்கள் ரூ.1,93,249 கோடிக்கு நகை அடகு வைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், நாட்டிலேயே தமிழகப் பெண்கள்தான் நகை அடகு வைப்பதில் முதலாவதாக இருப்பதும், 2020 டிசம்பரில் இது ரூ.62,578 கோடியாக இருந்து பிறகு 3 மடங்கு அதிகரித்ததும் தெரிய வந்துள்ளது.
News March 10, 2025
BREAKING: X தளம் மீண்டும் முடங்கியது

உலகம் முழுவதும் X தளம் முடங்கியுள்ளதால் பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கோடி பேர் பயன்படுத்தும் குறுஞ்செய்தி தளமான X, தகவல் பரிமாற்றத்திற்காக பயன்பட்டு வருகிறது. இன்று மதியம் அது சில நிமிடங்கள் முடங்கிய நிலையில், தற்போது மீண்டும் முடங்கியிருக்கிறது. செய்தி பரிமாற்றத்தின் முக்கிய தளமாக இருக்கும் X முடங்கியிருப்பது தகவல் பரிமாற்றத்தை பாதித்துள்ளது.
News March 10, 2025
கப் ஜெயித்த IND அணிக்கு ₹20 கோடி பரிசு

CT கோப்பையை வென்ற IND அணிக்கு ₹20 கோடியை ICC பரிசாக வழங்கியுள்ளது. அதேபோல், ரன்னரான NZக்கு ₹9.72 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 12 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபியை நாட்டுக்கு பெற்று தந்த காரணத்தால், இந்திய அணி வீரர்களுக்கு BCCI பரிசு வழங்கி கவுரவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடந்த CT ஃபைனலில் NZஐ 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் IND வீழ்த்தியது.