News March 10, 2025
‘தமிழை விட சமஸ்கிருதமே பழமையான மொழி’

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதம் இன்று அனல் பறந்தது. இந்த விவாதத்தின் போது பேசிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் சமஸ்கிருதத்தில்தான் பூஜைகள் நடப்பதாகவும், ஆனால், தற்போது தேர்தல் பயத்தில் மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பதாகவும் அவர் கூறினார். மேலும், தமிழை விட சமஸ்கிருதமே பழமையான மொழி என்றும் அவர் தெரிவித்தார்.
Similar News
News March 10, 2025
CT கோப்பையுடன் இந்திய வீரர்கள் பேரணியா?

கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற IND வீரர்கள் மும்பையில் கோப்பையுடன் பஸ் பேரணி சென்றனர். அவர்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோல், CT கோப்பையுடன் இந்திய வீரர்கள் பேரணி செல்வார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், துபாயில் இருந்து வீரர்கள் தனித்தனியாக அவர்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வதாக கூறப்படுகிறது. அதனால், பஸ் பேரணிக்கு வாய்ப்பில்லையாம்.
News March 10, 2025
துபாயில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த காரணம் என்ன?

நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து தங்கம் கடத்தியது பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. தங்கம் கடத்த துபாயைத் தேர்வு செய்வது ஏன் தெரியுமா? அங்கு தங்கத்திற்கு எந்த வரியும் விதிக்கப்படுவதில்லை. இதனால், உலகின் தங்க விற்பனை மையமாக துபாய் திகழ்கிறது. மேலும், துபாயில் இந்தியாவை விட தங்கத்தின் விலை கிராமிற்கு 300 ரூபாய் வரை குறைவு. இதன் காரணமாகவே தங்கம் கடத்துபவர்கள் துபாயைத் தேர்வு செய்கின்றனர்.
News March 10, 2025
ரூ.1.93 லட்சம் கோடிக்கு நகை அடகு வைத்துள்ள TN பெண்கள்

தங்கம் மீது ஆசையில்லாத பெண்கள் இல்லை எனலாம். அதே தங்கம்தான் சில குடும்பங்களின் அவசர தேவைக்கும் உதவுகிறது. 2024 டிசம்பரில் எடுக்கப்பட்ட ஆய்வில் தமிழகப் பெண்கள் ரூ.1,93,249 கோடிக்கு நகை அடகு வைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், நாட்டிலேயே தமிழகப் பெண்கள்தான் நகை அடகு வைப்பதில் முதலாவதாக இருப்பதும், 2020 டிசம்பரில் இது ரூ.62,578 கோடியாக இருந்து பிறகு 3 மடங்கு அதிகரித்ததும் தெரிய வந்துள்ளது.